ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மீண்டும் தோல்வியடைந்த ஐயன் டோம் – இஸ்ரேலியர்கள் பீதி!

ஈரானின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மீண்டும் தோல்வியடைந்த ஐயன் டோம்…
இஸ்ரேலின் அனைத்து வான் பாதுகாப்புகளையும் முறியடித்த ஹிஸ்புல்லா…
ஆள் இல்லா விமானம் மூலம் நேரடியாக தாக்கப்பட்ட ராணுவ முகாம்…
ஈரானின் கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள், ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானத்தை தடுக்க முடியாமல் தோல்வியடைந்த நிகழ்வு கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான், ஹிஸ்புல்லா, ஹவுத்திக்கள், ஹமாஸ் ஆகிய தரப்பினர் ஒரே நேரத்தில் இஸ்ரேல் மீது மிகப்பெரும் தாக்குதல்களை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படைகள் உஷார் நிலையில் உள்ளன.குறிப்பாக இஸ்ரேலின் வடக்கு பகுதியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமை, ஹிஸ்புல்லா ஏவிய ஆள் இல்லா விமானம் ஒன்று, கோலானி படைப்பிரிவு அலுவலகத்தை நேரடியாக துல்லியமாக தாக்கியது.
இதில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயம் அடைந்ததாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. எனினும், இதில் 2 வீரர்கள் மட்டும் காயம் அடைந்ததாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. எனினும், உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும், ஒரு ஆள் இல்லா விமானத்தை கூட இஸ்ரேலின் ஐயன் டோமால் தடுக்க முடியவில்லை என்ற தகவல் இஸ்ரேலியர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா, ஐயன் டோம் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல், அது இஸ்ரேலுக்குள் விழுந்து நொறுங்கி, தங்களதுக்கு தாங்களே ஒரு தாக்குதலையும் அது நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஐயன் டோம் தங்களுக்கு தாங்களே தாக்குதல் நடத்துவதும் இது முதல் முறையல்ல.
அண்மையில் ட்ருஸ் சமூகத்தினரின் கல்லூரி மைதானத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், இஸ்ரேலின் ஐயன் டோம் தான் காரணம் என்றும் அது தங்களது தாக்குதல் அல்ல என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. மேலும் டெல் அவிவ் உள்ளிட்ட பல நகரங்களில், ஐயன் டோம் குளறுபடியால், இஸ்ரேலுக்குள் விழுந்து, விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் ஹிஸ்புல்லா விளக்கம் அளித்துள்ளது.
=====