உலகம்
பாலஸ்தீனியர்களின் வெற்றி தவிர்க்க இயலாதது – ஈரான் சுப்ரீம் தலைவர் காமெனி!

ஈரான் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் கராசி மற்றும் ஹமாசின் சூரா கவுன்சில் தலைவர் தர்வேஸ் இடையேயான சந்திப்பு, கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றது. இதனை யொட்டி ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, கூறியுள்ளதாவது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை வீழ்த்தி பாலஸ்தீனியர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
போரின் முடிவில் இது தான் நடக்கும். இது தவிர்க்க முடியாதது. முஸ்லீம் உலகம் கவனமாக, கண்காணிப்புடன் இருக்க வேண்டும். உலகின் சூழலுக்கு அடிபணிந்து, பாலஸ்தீன பிரச்னையை, ஒதுக்கி வைக்கவோ, அதனை மறந்து விடவோ கூடாது.
காசாவில் சியோனிச நிர்வாகம் நடத்தி வரும் அத்துமீறல்களை ஒற்றுமையுடன் எதிர்த்து நின்று முறியடிக்க வேண்டும். இவ்வாறு தெஹ்ரானில் நடந்த தொழிலாளர்கள் கூட்டத்தில் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி பேசியுள்ளார்.
====