உலகம்

ஈரான் அதிபரின் ஆவேச உரை.

ஈரானின் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் மசூத் ஸ்பெசஸ்கியான் இஸ்ரேல் நிகழ்த்திய அட்டூழியங்களுக்கு நீதியைப் பெற்றிடும் வகையில், ஈரானுடைய தாக்குதல் உலக தரத்தில் அமைந்ததாகவும், அது ஈரானுடைய மதிப்பை உலக அளவில் உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் அதிநவீன பாதுகாப்பு மையங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும். அதை நிகழ்த்திய ஈரான் ஆயுதப்படையை பாராட்டுவதாகவும் கூறியிருக்கிறார்தெக்ரானின் விருந்தாளியான ஹமாசின் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டது இறையாண்மையை மீறிய அப்பட்டமான செயல், ஈரானின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது, இருந்தபோதிலும் சர்வதேச நாடுகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டி ஈரான் பொறுமையாக இருந்தது.

Iran’s President Masoud Pezeshkian attends a press conference in Tehran, Iran, September 16, 2024. WANA (West Asia News Agency)/Majid Asgaripour via REUTERS

காசா மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்பதற்காக உடனடியான தாக்குதலில் ஈடுபடாமல் ஈரான் பொறுமை காத்தது. ஆனால் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலையை நிறுத்தாமல் அந்த இனப்படுகொலை குற்றத்தை லெபனான் வரையும் நீட்டிச் செல்கிறது.இதை பார்க்கும் சர்வதேச அமைப்புகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரட்டை நிலைப்பாடோடு செயல்படுகிறது.ஐநா பொது சபையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்களை கொலை செய்த ரத்த கரையோடு இஸ்ரேல் பிரதமர் ஈரான் நாட்டை மிரட்டுகிறார், அதை அங்குள்ள உலக நாடுகள் மௌனமாக கடந்து செல்கிறது”. என ஈரான் அதிபர் தங்கள் நாடு நடத்திய தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் உரையாற்றி இருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button