இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான போரில் மாபெரும் வெற்றியடைந்த ஈரான்….

காசா, லெபனான் போர்களில் ஏற்பட்ட தோல்வியை விட பெரும் தோல்வியை ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் சந்தித்துள்ளது. ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடை செய்வது, ஈரானின் மிசல்ஸ் தொழில்நுட்பத்தை முடக்குவது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது போன்ற 3 இலக்குகளை முன்வைத்து, இஸ்ரேல், ஈரான் மீது திடீர் தாக்குதலை தொடங்கியது.
ஈரானின் அணு விஞ்ஞானிகள், மூத்த ராணுவ தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், மிசல்ஸ் லாஞ்சர்கள், விமானத் தளங்கள் ஆகியவை கடுமையாக தாக்கப்பட்டன. அதே நேரம் ஈரான் கொடுத்த பதிலடியால் கடந்த 12 நாட்களாக இஸ்ரேலின் ஒட்டுமொத்த 1 கோடி ஆக்கிரமிப்பு மக்களும், தங்களது பெரும் பகுதியை பங்கர்களில் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த போர் இஸ்ரேலின் இருத்தலுக்கான போர், இந்த போரில் இஸ்ரேல் தனது இலக்குகளை அடைந்தால் மட்டுமே தப்பிப் பிழைக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு கூறி இருந்தார். ஆனால் எந்த வித போர் இலக்குகளையும் நிறைவேற்றாமல், இந்த போரை அமெரிக்கா அதிபர் டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். அதாவது, இனி இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அவர் விரும்பவில்லை.
எனவே இது இஸ்ரேல் அரசியல்வாதிகளுக்கு பெரும் அவமானமாக மாறியுள்ளது. மேலும் ஈரான் தனது யுரேனியத்தை பத்திரமாக மீட்டுள்ளது. அதன் ஏவுகணை தொழில்நுட்பம் உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளது. ஈரானின் ஆயத்துல்லா கொமேனி நிர்வாகத்தின் மீது ஒரு தரப்பினருக்கு அதிருப்தி இருந்த நிலையில், தற்போது, அவர்களும் ஈரான் நிர்வாகத்தின் பக்கம் ஓரணியில் திரண்டு, ஈரான் ஒற்றுமையுள்ள நாடாக மாறியுள்ளது. எனவே, இஸ்ரேலின் 3 போர் இலக்குகள் நிறைவேற்றப்படாமல், மாறாக ஈரானுக்கு இந்தப் போரில் 3 நன்மைகள் கிடைத்துள்ளன.