உலகம்

“நான் செத்தால், ஈரான் இருக்கக் கூடாது” டொனால்டு டிரம்ப் உலறல்!

தன்னை ஈரான் கொன்றால், அதற்கு பிறகு அந்த நாடே இருக்காது…
அப்படி செய்யாவிட்டால் அமெரிக்க தலைவர்கள் கோழைகளாகி விடுவார்கள்…
முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் முதிர்ச்சியற்று உலறல்…

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்ட வேண்டும் என்று சொன்னவர் இயேசு நாதர் சொன்னதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால் பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் நிறைந்த நாட்டின் ஒரு தலைவர் இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அதாவது, தன்னை ஈரான் கொலை செய்தால், அந்த நாடு, உலக வரைபடத்திலேயே இல்லாதவாறு அழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை அமெரிக்க தலைவர்கள் செய்வார்கள் என்றும், அப்படி செய்யாதவர்கள், கோழைகளாக கருதப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்பை கொல்ல ஈரான் சதி செய்வதாக அமெரிக்க ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன.

அதே நேரம் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் டொனால்டு டிரம்பின் காது கிழிந்தது. அதற்கும், ஈரானின் திட்டத்திற்கும் தொடர்பில்லை என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய நெதன்யாகுவும், ஈரான், டிரம்பை கொல்ல சதித்திட்டத்தை வைத்துள்ளதாக எச்சரித்தார்.

இதனால் அதிர்ச்சியில் இருக்கும் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் முதிர்ச்சியற்ற கருத்தை தெரிவித்துள்ளார். அவருக்கு 78 வயது ஆவது குறிப்பிடத்தக்கது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button