பழி தீர்ப்பதற்கு அடையாளமாக சிவப்புகொடி ஏற்றிய ஈரான்!

நேரடியாக இஸ்ரேலை தாக்க வேண்டும்…
ஈரான் ராணுவத்துக்கு சுப்ரீம் தலைவர் அதிரடி உத்தரவு…
சிவப்பு கொடி ஏற்றி பழி தீர்க்க சூளுரை…
ஈரான் மண்ணில், அதன் விருந்தினராக சென்ற ஹமாஸ் அரசியல் குழு தலைவர் இஸ்மாயில் ஹனியே, கொல்லப்பட்டு வீர மரணம் அடைந்துள்ளார். இது முஸ்லீம் உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளும், முஸ்லீம் நாடுகளும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், இது ஈரான் மண்ணில் நடைபெற்ற சம்பவம் என்பதால், இதற்கு பழி தீர்ப்பதற்கான பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக ஈரான் இஸ்லாமிய குடியரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி, பழி தீர்ப்புக்கு அடையாளமாக அந்நாட்டின் புனித தலமான க்குவாம் நகரில் உள்ள ஜம்கரன் பள்ளிவாசலில், சிவப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
அரிதான தருணங்களில் மட்டுமே இவ்வாறு சிவப்பு கொடி ஏற்றப்படும். அப்படி ஏற்றப்பட்டால், ஈரான் கோபத்தின் உச்சியில் இருப்பதாக பொருள் கொள்ளப்படுகிறது. மேலும் பழி தீர்க்கப்பட்ட பிறகே அந்த கொடி இறக்கப்படும்.
ஈரான் அதிபராக பதவி ஏற்றுள்ள மசூத் பெசஸ்கியான், கிரிமினல் பயங்கரவாத இஸ்ரேல், தனது செயலுக்கு வருந்தும் வகையிலான பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்தார். ஈரான் தலைநகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், அதே போன்று இஸ்ரேலின் டெல் அவிவ் தாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு காரணம், முக்கிய விமான நிறுவனங்கள் டெல் அவிவ்விற்கு போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன. இதே போல் இஸ்ரேலின் வடக்கு நகரங்களில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு, பல பகுதிகளில் வான் எல்லையை மூடியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
====