உலகம்

இடைமறித்தல்கள் முறியடிப்பு – 15 நிமிடம் பறந்த ஆள் இல்லா விமானம்!

செவ்வாய்கிழமை ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானம் ஒன்று, இஸ்ரேல் கட்டுப்பாட்டு பகுதிக்குள் 20 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து, ராணுவத்தின் 91வது டிவிசன் ரிசர்வ் தலைமையகத்தை தாக்கியுள்ளது. அந்த தலைமைகயம் மீது ஹிஸ்புல்லா நடத்தும் 3வது தாக்குதல் இது ஆகும்.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆக்கிரமிப்பு ஊடகங்கள், சுமார் 15 நிமிடம் இஸ்ரேல் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பறந்த அந்த ஆள் இல்லா விமானம், பல இடைமறித்தல்களை முறியடித்து, இலக்கை சென்றடைந்ததாக குறிப்பிட்டுள்ளன.இந்த இடைமறித்தல் தொழில்நுட்பங்களுக்காக இஸ்ரேல் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து வரும் நிலையில், அவை தற்போது, தோல்வி முகம் கண்டுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

இதே போல் செவ்வாய்கிழமை அன்று மேலும் ராணுவ இலக்குகளை குறிவைத்து, ஹிஸ்புல்லா, பல்வேறு ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களில் மட்டும் சுமார் 200 ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா வீசியுள்ளது.லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை தொடுத்து, ஹிஸ்புல்லாவின் முக்கிய கமாண்டர்களை கொன்று விட்டதாக கூறி வருகிறது. அதே நேரம் ஹிஸ்புல்லா தனது தாக்குதல்களை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் மூலம் அதன் தாக்குதல் திறன் தொடர்ந்து மேம்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button