இந்தியா

பாக்சர்களை வைத்து வெளியேற்றப்பட்ட இன்போஷிஸ் ஊழியர்கள் – 2 ஆண்டுகள் காத்திருந்தவர்கள்!

இன்ஃபோசிஸில் உள்ள ஏராளமான பயிற்சி பணியாளர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், இதனால் மன உளைச்சல் அடைந்த பணியாளர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதில் பலர் தங்களின் ஆஃபர் லெட்டர்களைப் பெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தவர்கள், மேலும் சிலர் கடந்த செப்டம்பர் 2024 ல் பணியமர்த்தப்பட்டவர்கள். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி இருந்த நிலையில் திடீரென 700 பேரை இன்போசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்திருக்கிறது.இந்தப் பணிக்காக தயாரானவர்களுக்கு இந்த செய்தி பேர் அதிர்ச்சியை தந்திருக்கிறது , அவர்களில் பலர் இன்ஃபோசிஸில் பணிபுரிவதற்காக மற்ற வாய்ப்புகளை நிராகரித்தவர்கள்

இந்த பணிநீக்கம் மூத்த ஊழியர்கள் மற்றும் அமெரிக்க வாடிக்கையாளர்கள் வளாகத்தில் இருந்த நிலையில் நடத்தப்பட்டுள்ளது, மேலும் தனியார் பாக்ஸர்களை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளனர்.பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் குழுவாக அழைக்கப்பட்டு, அவர்களின் மடிக்கணினிகளைக் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர், மேலும் அதிக கவனத்தை ஈர்க்காத வகையில் வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.சமூக ஊடகங்களில் பாதிக்கப்பட்ட ஊழியர்களை ஆதரிக்கும் வகையில் அனுதாபத்தையும் வெளிப்படுத்தினர், பலர் வேலை பாதுகாப்பு குறித்த கவலைகளை எடுத்துக்காட்டுகின்றனர்.இந்த பணிநீக்கங்கள் குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button