இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றது முதலே இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாமுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றதை தொடர்ந்து டாலரின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இது ஆசிய நாணயங்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இன்று திர்ஹாமுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது.
நேற்று திர்ஹாமுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.37 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, 84.38 ஆக குறைந்தது. கடந்த 5 வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதற்கு வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து தங்களது பங்குகளை வெளியேற்றுவதே காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டாலர் குறியீட்டு எண் உயர்வு அல்லது வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து தங்களது பங்குகளை வெளியேற்றுவதை நிறுத்ததாத வரை சர்வதேச அந்நிய செலவாணி சந்தையில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரியவே வாய்ப்புள்ளது.