நவீன ஆயுதத்தை களமிறக்கிய பாகிஸ்தான் – ஆனாலும் இந்தியாவுக்கு ஈடு கொடுக்க முடியாது
சமீபத்திய ஆண்டுகளில் இருந்ததை விட இருநாடுகளுக்கும் இடையே போர் அச்சுறுத்தல் பெரிதாகத் தெரிகிறது

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா எந்த நேரமும் பதிலடி கொடுக்கலாம் என்ற அச்சம் பாகிஸ்தானில் அதிகரித்து வருகிறது.
கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் விரிவான இராணுவக் குவிப்பைத் தொடங்கியுள்ளது, எல்லையில் வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கி பிரிவுகளை நிலைநிறுத்தியுள்ளது. நிலம் மற்றும் வான்பரப்புகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் இருந்ததை விட இருநாடுகளுக்கும் இடையே போர் அச்சுறுத்தல் பெரிதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் விமானப்படை F-16, J-10 மற்றும் JF-17 போன்ற போர் விமானங்களை உள்ளடக்கிய ஃபிசா-இ-பத்ர், லால்கர்-இ-மோமின் மற்றும் சர்ப்-இ-ஹைதேரி ஆகிய மூன்று இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் இராணுவம் சீனாவிடமிருந்து வாங்கிய அதன் சமீபத்திய பீரங்கி அமைப்பான – SH-15 ஹோவிட்சரை பயன்படுத்துவத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது.
2019 ஆம் ஆண்டு சீனாவின் நோரின்கோ குழுவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்பட்ட SH-15, 6×6 ஷான்சி ரக டிரக் சேஸில் பொருத்தப்பட்ட 155 மிமீ/52-காலிபர் ஹோவிட்சர் ஆகும். நேட்டோ-தரநிலை மற்றும் ஜிபிஎஸ்-வழிகாட்டப்பட்ட அமைப்பு ,வெடிமருந்துகள் சுடும் திறன், 53 கிலோமீட்டர் வரையிலான வரம்பு மற்றும் ஷூட்-அண்ட்-ஸ்கூட் திறன் ஆகியவை இந்த பீரங்கியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பாகிஸ்தானில் உள்ள சில இராணுவ ஆய்வாளர்கள் இந்த அமைப்பு தந்திந்திரோபய அணு குண்டுகளை ஏவும் திறன் கொண்டது என கூறுகின்றனர்.ஆனால் இதுவரை எந்த போர்க்களத்திலும் இந்தவகை பீரங்கி பயன்படுத்தப்படவில்லை.
இருப்பினும், இந்தியாவில் உள்ள இராணுவ வல்லுநர்கள் நம் நாட்டின் K-9 வஜ்ராவுடன் SH-15 இன் செயல்திறனை ஒப்பிட முடியாது என குறிப்பிடுகின்றனர்.
தென் கொரியாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட K-9 வஜ்ரா, இதேபோன்ற தூரத்தைக் கொண்டுள்ளது.ஆனால் இது சிறந்த துப்பாக்கிச்சுடும் வீதத்தைக் கொண்டுள்ளது.நிமிடத்திற்கு 6 முதல் 8 சுற்றுகள் மற்றும் வலுவான டிஜிட்டல் தீ கட்டுப்பாடு மற்றும் சிறந்த வழிசெலுத்தல் அமைப்பு மூலம் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது.
இதன் 50 டன் எடை கொண்ட சேஸ், பாலைவனங்கள் மற்றும் மலைப்பகுதிகளிலும் போர்க்களத்திற்கான சிறந்த தேர்வாக இருக்கும்.இது பாகிஸ்தானின் சக்கர SH-15 ஐ விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். தற்போது, இந்தியாவில் கிட்டத்தட்ட 100 K-9 வஜ்ரா அலகுகள் உள்ளன. அவை உள்நாட்டு பினாகா மல்டி-பேரல் ராக்கெட் ஏவுதல் அமைப்பால் செயல்படுத்தப்படுகின்றன.இது இராணுவத்திற்கு ஒரு குறிப்படத்தக்க நன்மையை அளிக்கிறது.