நீ வரமுடியாவிட்டால், உன் தோழிகளை அனுப்பு – ரியாஸ்கான் மீது குற்றச்சாட்டு! நடந்தது என்ன?

மலையாள சினிமா உலகை உலுக்கியுள்ள ஹேமா கமிட்டி விவகாரம்…நடிகர் ரியாஸ் கான் மீதும் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு…நடிந்தது என்ன…?தமிழில் பிரபல நடிகராக இருக்கும் ரியாஸ்கான் கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர். கேரள சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர். அவரது தந்தை பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஆவார். இந்நிலையில் நடிகர் ரியாஸ்கான் மீது நடிகை ரேவதி சம்பத் பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
நள்ளிரவு தனக்கு போன் செய்த ரியாஸ்கான் தன்னுடன் படுக்கையை பகிர முடியுமா எனக் கேட்டதாக அந்த நடிகை கூறியுள்ளார்.
தனக்கு அதில் விருப்பம் இல்லை என கூறியதாகவும், இதனையடுத்து, தான் அடுத்த 9 நாட்களுக்கு கொச்சியில் தான் இருப்பேன் எனத் தெரிவித்த ரியாஸ்கான், வேறு பெண்களை தனக்காக ஏற்பாடு செய்து தர முடியுமா என்றும், உனது தோழிகள் யாராவது இருந்தால், அவர்கள் எண்ணை அனுப்பு என கேட்டதாகவும் குறிப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நடைபெற்ற போது, தனக்கு வயது 20 தான் என்றும், என்ன சொல்வது என்றே தெரியாமல் அதிர்ச்சியில் உரைந்ததாகவும் அந்த நடிகை ரேவதி சம்பத் கூறியுள்ளார்.
இந்த நடிகை தான் மலையாள சினிமா சங்கமான அம்மாவின் பொதுச் செயலாளராக இருந்த சித்திக் மீதும் புகார் எழுப்பி இருந்தார். இந்த புகாரை மறுத்த சித்திக், இது முழுக்க முழுக்க சதித்திட்டத்தின் ஒரு பகுதி எனக் கூறியதோடு, ரேவதி சம்பத் மீது காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.அதே நேரம் காவல்துறையினர் ரேவதி சம்பத் அளித்த புகாரின் பேரில் நடிகர் சித்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் கேரள சினிமா வட்டாரத்தை உலுக்கியுள்ள நிலையில், வாய்ப்பு கிடைக்காத நடிகைகள், பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பதற்காக, இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக கூறியுள்ளனர்.