கங்கனாவை அறைந்த காவலர் நீக்கப்பட்டால், வேலை வழங்க தயார் – பிரபல பாடகர் அறிவிப்பு!

விவசாயிகளை இழிவுபடுத்தி பேசிய கங்கனா ரனாவத்தை அடித்த காவலர்…வேலையில் இருந்து நீக்கப்பட்டால் புதிய பணி வழங்கத் தயார்…பிரபல பாலிவுட் பாடகர் விஷால் அறிவிப்பு…சாருக்கானின் ஜவான் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ராமைய்யா ஒஸ்தாவய்யா, தூம் படத்தில் இடம்பெற்ற Dhoom machale Dhoom machale Dhoom உள்ளிட்ட பல பிரபல பாடல்களை பாடியவர் விஷால் டாட்லானி. பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தனது சமூக வலைதளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது, தான் ஒருபோதும் வன்முறையை ஆதரிப்பவன் அல்ல. ஆனால் அந்த பெண் காவலரின் கோபத்தில் உள்ள நியாயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.அந்த பெண் காவலர் மீது பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவருக்கு நான் ஒரு நல்ல வேலை அளிக்க தயாராக உள்ளேன். இதனை ஏற்றுக் கொள்வது, அவரது விருப்பம். இந்தியா வாழ்க… ராணுவம் வாழ்க… விவசாயிகள் வாழ்க… என பதிவிட்டுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக ஆளும் பாஜகவிற்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், வெறுப்புப் பிரச்சாரங்களையும் வெளியிட்டு வந்தார் நடிகை கங்கனா ரனாவத். ‘குறிப்பாக டெல்லியில் விவசாயிகள் விரோத சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை, தீவிரவாதிகள் என்றும், பெண்களை, 100 ரூபாய் கூலிக்கு வேலை செய்பவர்கள் என்றும் இழிவுபடுத்தினார்.இந்த நிலையில், அந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் மகளான மத்திய தொழில் பாதுகாப்பு படையின் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர், நடிகை கங்கனாவை விமான நிலையத்தில் பார்த்த போது, கன்னத்தில் பளார் என அறைந்தார். இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சொந்த ஊர் திரும்ப வந்த கங்கனா, கடும் அவமானத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.