ஹிஸ்புல்லாவை தொட்டால், இஸ்ரேல் தடம் தெரியாமல் அழிக்கப்படும் – ஈரான் கடும் எச்சரிக்கை!

லெபனான் மீது இஸ்ரேல் முழு அளவிலான போரைத் தொடங்கினால், இஸ்ரேல் உருத் தெரியாமல் அழிக்கப்படும் என ஐ.நா.வுக்கான ஈரான் பிரதிநிதி Amir Saeid Iravani தெரிவித்துள்ளார்.அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேல் அனைத்து புறங்களில் இருந்தும் தாக்கப்படும், எங்களது கூட்டணி படைகள் அதனை செய்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் கூட்டணியில் ஹிஸ்புல்லா, ஏமன் ஹவுத்திப் படைகள், சிரியா, ஈராக்கில் செயல்படும் போராளிக்குழுக்கள் அங்கம் வகிக்கின்றன.காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து, இந்த படைகள் ஏற்கனவே இஸ்ரேல் மீது மிதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.இந்த படைகள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், காசாவில் உள்ள சன்னி பிரிவு முஸ்லீம்களுக்காக தொடர்ந்து இஸ்ரேல் உடன் போரிட்டு வருகின்றனர்.
அண்மைக் காலமாக, இஸ்ரேல் மட்டும், ஹிஸ்புல்லா இடையே போர் சற்று தீவிரம் அடைந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் முழு அளவிலான போரை தொடுக்கலாம் என கருதப்படுகிறது. இந்தச் சூழலில் ஐ.நா.வுக்கான ஈரான் பிரதிநிதி இந்த பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.