ராமர் கோவிலுக்கு நிதி உதவி அளிக்க மாட்டேன் – பள்ளிக்கூடத்திற்கு உதவுவேன்! நடிகை வித்யாபாலன்!

கோவில்களுக்கு நன்கொடை அளிக்கமாட்டேன் என இன்று வட இந்தியாவில் யாரும் சொல்ல முடியுமா? சாதாரண மக்களே அவ்வாறு சொல்லமுடியாத நிலையில், ஒரு பாலிவுட் நட்சத்திரம் அப்படி சொல்லியிருக்கிறார் என்றால் அது நம்பமுடியாத ஒரு செயல்தான்.
வாருங்கள் அது யார் என பார்க்கலாம்.
நடிகை வித்யாபாலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் தினமும் பூஜை செய்யும் ஆன்மீக வாதிதான் என்றாலும், கோவில்களை கட்ட நிதி கேட்பவர்களுக்கு நான் எதுவும் கொடுக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும், நீங்கள் மருத்துவமனை, பள்ளி அல்லது கழிப்பறை கட்டுவதாக இருந்தால் அதற்கு நான் மகிச்சியுடன் நிதியளிப்பேன், ஆனால் மத நிறுவனங்களுக்கு நிதியளிக்கமாட்டேன் என கூறியுள்ளார்.
அடுத்ததாக அவர் கூறிய கருத்துதான் மிக முக்கியமானதாகும். தேசம் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுவது குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, முன்பு இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் நாம் யாரும் அடையாளப்படுத்தப்படவில்லை.
ஆனால் இப்போது ஏன் அவ்வாறு இருக்கவேண்டும் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
அதோடு, நாம் அனைவரும் இந்த உலகில் நம்மிடம் இயற்கையாக இல்லாத ஒரு அடையாளத்தைத் தேடி, அதில் நம்மை இணைத்துக் கொள்ள விஷயங்களைத் தேடுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, இப்போது நடிகர்கள் அரசியலைப் பற்றி பேசுவதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள், ஏனென்றால் நம் செயலால் யார் எப்போது புண்படுவார்கள் என உங்களுக்குத் தெரியாது என்றும், என்னை அரசியலில் இருந்து தள்ளியே வையுங்கள் என்றும் கூறியுள்ளார்.
பிரபல நடிகை ஒருவரின் அரசியல் ரீதியாக கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
============