“உங்களை ரொம்ப மிஸ் பண்ணி விட்டேன்” மோடி ஜி-யை பார்த்து உருகிய டிரம்ப்!

பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், டொனால்டு டிரம்ப், வழக்கங்களை மீறி மோடியை கட்டியணைத்து வரவேற்றார்.
மோடி – டிரம்ப் இடையேயான உறவு வலுவானது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதன்முறையாக டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற நிலையில், அவரை குஜராத்துக்கு வரவேற்று, சிறப்பித்தார். குஜராத்தின் குடிசைப் பகுதிகளை வெள்ளைத் துணியாலும், சுவர்களாலும் மூடி பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக அங்கு சென்று, டிரம்புக்கு ஆதரவும் திரட்டினார்.
ஆனால் அந்த தேர்தலில் டிரம்ப் தோற்று விட்டார். இந்த நிலையில், மீண்டும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.முன்னதாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி, இந்தியர்களை சாக்குமூட்டைகள் போல் கை கால்களை கட்டி, ராணுவ விமானத்தில் 45 மணி நேரமாக அடைத்து வைத்து இந்தியாவுக்கு அனுப்பி இருந்தார் டிரம்ப். இதனால் இந்தியா – அமெரிக்கா உறவுகளில் விரிசல் ஏற்பட்டு விடுமோ என்ற விமர்சனங்கள் எழுந்தன.ஆனால், மோடியை பார்த்தும் டிரம்ப் கட்டிப்பிடித்து, வரவேற்றதோடு, I MISS YOU LOT என டிரம்ப் கூறியதோடு, மோடியின் புத்தகத்தில் YOU ARE GREAT என எழுதிக் கொடுத்துள்ளார் டிரம்ப்.மேலும் இந்தியாவிற்கு F35 எனப்படும் அதி நவீன போர் விமானத்தை, காசுக்கு விற்பனை செய்வது குறித்து, பரிசீலிக்கப்படும் என்றும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.