சினிமா

பெண் குழந்தை வேண்டாம், ஆண் குழந்தை தான் வேண்டும் – சிரஞ்சீவி சர்ச்சை கருத்து!

நடிகர் சிரஞ்சீவியின் ஒரே மகன்

. இவர் பிரபல தொழில் அதிபரின் மகளான உபசனா காமினேனியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சிரஞ்சீவிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் சுஸ்மிதா. இன்னொருவர் சிரிஜா.இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிரஞ்சீவி, தான் வீட்டில் இருக்கும் போது, தன்னைச் சுற்றி பேத்திகள் இருப்பது போல் இல்லை. மகளிர் விடுதி வார்டனைப் போல் உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் மகள் தான் ராம் சரணுக்கு உயிர். இப்படியே போனால் அவர் மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து விடுவாரோ என அச்சமாக உள்ளது. தலைமுறை விருட்சம் அடைய ஒரு ஆண் குழந்தை வேண்டும் என பேசியுள்ளார்.


அவரது இந்தப் பேச்சு பெண் குழந்தைகளுக்கு எதிரான மனநிலையை வளர்ப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பதிவிட்டுள்ள ஒரு வலைதளவாசி, சிரஞ்சீவி அவர்களே, ஏன் ஆண் வாரிசுகள் தான் தலைமுறையை விருத்தி செய்ய வேண்டுமா, பெண் பிள்ளைகளை வாரிசுகளாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஒரு பெண் ரசிகை வெளியிட்டுள்ள பதிவில், எனக்கும் கூட பெண் குழந்தை உள்ளது. பலரும் என்னிடம் ஆண் குழந்தையை பெற்றுத் தருமாறு கேட்கிறார்கள். இது மிகவும் வெறுப்பாக உள்ளது. எனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விசயத்தை, நான் எப்படி அவர்களுக்காக செய்து கொடுக்க முடியும். ஆணோ, பெண்ணோ இறைவன் தானே முடிவு செய்கிறான் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button