எப்படி செயல்படுத்தப்பட்டது திட்டம்? முழுத் தகவல்கள்!

செப்டம்பர் 17 ,18 பேஜர் வெடிப்பு நடந்த உடன் ஹிஸ்புல்லாவுக்குள் இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறை நுழைந்து விட்டதாகவும், இதனால் ஹசன் நசருல்லாஹ் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்பட வாய்ப்பு இருப்பதால் அவரை உடனே லெபனானை விட்டு வெளியேறுமாறு ஈரான் சுப்ரீம் தலைவர் அயத்துல்ல அலி காமேனி எச்சரித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால் தன்னுடைய பாதுகாப்பையும் தன்னுடன் நெருக்கமாக இருப்பவர்களையும் முழுமையாக நம்பி ஹசன் நஸருல்லாஹ் லெபனானை விட்டு வெளியேற மறுத்துள்ளார்.மீண்டும் ஈரானின் ராணுவ தளபதிகளில் ஒருவரான அப்பாஸ் நில்ஃபோருஷன் மூலம் அயத்துல்ல அலி கமேனி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இரண்டாவது முறையும் நசருல்லாஹ் லெபனானை விட்டு வெளியேற மறுத்துள்ளார்.பேஜர் வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு ஹசன் நசருல்லாவின் உயிருக்கு ஆபத்திருப்பதை உணர்ந்த ஈரான் அவரது உயிரை பாதுகாக்க பல்வேறு உயிர் மட்ட ஆலோசனையை ஈரான் தலைநகர் தெக்ரானில் நடத்தி இருக்கிறது.
அயதுல்ல அலி கமேனி எதிர்பார்த்தது போலவே ஹசன் நசருல்லாஹ் செப்டம்பர் 27ஆம் தேதி ஆக்கிரமிப்பு இஸ்ரேலால் கொல்லப்பட்டார். ஈரான் தலைவரின் தகவலை கொண்டு வந்த ஈரானின் ராணுவ தளபதியான அப்பாஸ்நில்ஃபோருஷனும் ஹசன் நஸருல்லாவுடன் கொல்லப்பட்டார்.அதுவும் நசருல்லாஹ், ஹிஸ்புல்லாவின் தலைமை கட்டிடத்தின் பங்கர் பகுதியில் இருப்பதை துல்லியமாக தெரிந்த இஸ்ரேல் பங்கரை அழிப்பதற்கான வெடிகுண்டுகளை வீசி ஹசன் நசுருல்லாவை கொன்றுள்ளது.
இந்த அளவுக்கு துல்லியமான தகவல் ஹிஸ்புல்லாவிற்குள்ளிருந்து தான் சென்றிருக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். அதேபோல பேஜர் வெடிப்புச் சம்பவத்தை ஷேக் நபில் கவுக் என்னும் ஹிஸ்புல்லாவின் மூத்த அதிகாரி ஒருவர் தான் விசாரணை நடத்தி வந்தார்.குறிப்பாக பேஜர் எவ்வாறு வாங்கப்பட்டது அது எப்படி லெபனானுக்குள் கொண்டுவரப்பட்டது போன்ற பல விஷயங்களை விசாரணை நடத்தி வந்திருக்கிறார். இந்த தாக்குதல் குறித்து கிட்டத்தட்ட 100 பேரை காவலில் எடுத்து விசாரித்துள்ளார்.இந்த நிலையில் ஹசன் நசருல்லாஹ் கொல்லப்பட்ட மறுநாளே இந்த விசாரணையை தலைமையேற்று நடத்தி வந்த ஷேக் நபில் கவுக்கும் கொல்லப்பட்டிருக்கிறார்.
இதன் மூலம் பேஜர் தாக்குதலுக்கு தொடர்பான குற்றவாளிகள் தப்பிப்பதற்கு அதன் விசாரணை அதிகாரியையே இஸ்ரேல் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.இந்த அளவுக்கு நுணுக்கமான தகவல்கள் இஸ்ரேலுக்கு கிடைத்திருக்க வேண்டுமானால் ஹிஸ்புல்லாவிற்குள் மொசாத் ஊடுருவி இருக்க வேண்டும். ஹிஸ்புல்லாவின் வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய உளவுத் துறை ஊடுருவல் என்று கூறப்படுகிறது.அதேபோல ஹசன் நசுருல்லாஹ் கொலை தொடர்பான விஷயத்தில் மொசாதின் ஊடுருவல் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளிடமும் இருக்குமோ என்ற அச்சம் ஈரானுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
ஈரான் ராணுவத்தின் காவலர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை இது குறித்து விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.குறிப்பாக சமீபத்தில் அதிகமாக யார் வெளிநாடு சென்று வந்திருக்கிறார்கள் யாருடைய குடும்பம் வெளிநாடுகளில் இருக்கிறது என்ற அடிப்படையில் இந்த விசாரணை நடந்திருக்கிறது.
இதில் ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு காவலர் நசருல்லாவை குறித்து அதிக தகவலை கேட்டு தெரிந்து இருக்கிறார். குறிப்பாக அவர் எங்கு இருப்பார்? அந்த இடத்தில் எவ்வளவு நேரம் இருப்பார்? போன்ற கேள்விகளை கேட்டு தெரிந்திருக்கிறார். அந்த நபரை ஈரான் அரசு தற்பொழுது கைது செய்திருக்கிறது.இவரை கைது செய்ய ஈரான் அரசு நெருங்கும் போதே அவருடைய குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கும் சென்று விட்டனர்.
இது மேலும் அவர் மீது சந்தேகத்தை அதிகரித்திருக்கிறது.ஒருவேளை இவரே உளவு தகவல்களை இஸ்ரேலுக்கு பகிர்ந்து இருந்தாலும் இவர் ஒருவரது தகவலை மட்டும் வைத்து மொசாத் முடிவு செய்து இருக்காது. இதுபோன்று பல உளவு ஏஜெண்டுகளை இஸ்ரேல் நியமித்திருக்கும்.அதன் மூலமே ஹசன் நசருல்லாவை துல்லியமாக திட்டமிட்டு கொலை செய்திருக்கும் என்று கருதபடுகிறது.