உலகம்

சூடுபிடித்துள்ள ஒத்திகை!

ஆக்கிரமிப்பு செட்டில்மென்டுகளை போலியாக உருவாக்கி பயிற்சி…
தரைவழி நடவடிக்கைக்கு தயாராகும் ஹவுத்திக்கள்…

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பகுதியைப் போன்று, பகுதிகளை உருவாக்கி, தரை வழித் தாக்குதல் நடத்தும் பயிற்சிகளை ஏமன் ஹவுத்திப்படைகள் மேற்கொண்டு வருகின்றன.
காசா போர் தொடங்கியது முதல், அங்கு சென்று, இஸ்ரேல் உடன் தரைவழியாக போரிடத் தயார் என்றும் அரபு நாடுகள் தங்களது எல்லைகளை திறந்து அதற்கு வழிவிட வேண்டும் என ஏமன் ஹவுத்திப் படைகள் கேட்டுக் கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ஏமன் தொலைக்காட்சியில் பேசிய, அந்நாட்டுத் தலைவர் சையது அப்துல் மாலிக் அல் ஹவுத்தி, தண்ணீரில் எதிரிகளுக்கு அதிர்ச்சி அளித்தது போன்று, தரையிலும் அதிர்ச்சி அளிப்போம் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ஏமன் ஆயுதப் படைகள் தரை வழித் தாக்குதல்களுக்கான ஒத்திகைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு செட்டில்மென்டுகளை போன்று உருவாக்கப்பட்ட நிலப்பகுதியில், ஹவுத்திப்படைகள் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாக காசாவைப் போன்று போலியாக ஒரு பகுதியை உருவாக்கி இஸ்ரேல் படைகள் பயிற்சி எடுத்தன. அதேப் போன்று இஸ்ரேலுக்கு உதவ, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ராணுவங்கள் உதவி வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து கூலிப்படைகளையும் இஸ்ரேல் ராணுவத்தில் பணி அமர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம் காசாவிற்கு உதவியாக ஈரான் ஆதரவு படைகளைத் தவிர, வேறு எந்த எந்த சன்னிப்பிரிவு முஸ்லீம் நாடுகளும் ராணுவ உதவி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button