ஹவுத்தி நடவடிக்கைகளால் ரூ. 18 ஆயிரம் கோடி நட்டம்! அமெரிக்க ஆதரவு எகிப்து கவலை!

ஏமன் ஹவுத்திப் படைகளின் தொடர் நடவடிக்கை எதிரொலி…
அமெரிக்க ஆதரவு எகிப்து நாட்டிற்கு 18 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு…
சூயஸ் கால்வாய் வழியாக இஸ்ரேல் செல்வதை தவிர்த்த 5000 சரக்கு கப்பல்கள்…
காசா மீது இஸ்ரேல் 286வது நாளாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் 40 ஆயிரம் காசா மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அரேபியர்களாக, முஸ்லீம்களாக, சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தும் கூட, மேற்கண்ட 3 பிரிவுகளை சேர்ந்த சன்னிப்பிரிவு அரபு முஸ்லீம் நாடுகளால் காசா மக்களை காப்பாற்ற முடியவில்லை.
இன்னும் சொல்லப் போனால், சன்னிப் பிரிவு அரபு முஸ்லீம் நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஜோர்டான், குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகள் பாலஸ்தீனியர்களுக்கு உதட்டு சேவை மட்டுமே செய்து வருகின்றன.
இஸ்ரேல் உடனும், அமெரிக்கா உடனும்,அவர்கள் தொடர்ந்து சீரான உறவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கண்ட நாடுகளின் துறைமுகங்களில் இருந்து, இஸ்ரேல், அமெரிக்க, பிரிட்டன் கப்பல்கள் வந்து செல்கின்றன.
அதே நேரம் ஷியா பிரிவு நாடாக உள்ள ஈரான் தொடர்ந்து, இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுடன் உறவுகளை துண்டித்துள்ளது.
காசாப் போரில், பாலஸ்தீன் மக்களுக்காக நேரடியாக ஆதரவு வழங்கி வருகிறது. ஈரானிடம் உதவி பெறும் ஹிஸ்புல்லா, ஏமன் ஹவுத்தி அரசு, சிரியா அரசுகள் தான் இஸ்ரேலை ராணுவ ரீதியில் எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில், செங்கடல் வழியாக, இஸ்ரேல் துறைகங்களுக்கு எந்த கப்பலும் செல்ல கூடாது என ஏமனை ஆட்சி செய்யும் ஹவுத்திப் படைகள், கடல் முற்றுகையை அறிவித்தனர். கடந்த 10 மாதங்களாக இந்த முற்றுகை அமலில் உள்ளது.
இந்த வழியாக செல்லும் கப்பல்கள் தான் எகிப்தின் சூயஸ் கால்வாயை கடந்து, ஐரோப்பிய நாடுகளுக்கும், இஸ்ரேலுக்குள் செல்கின்றன. இந்நிலையில், சூயஸ் கால்வாய் நிர்வாகம் தங்களுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இதே போல் கப்பல்களின் வருகை 25 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ராணுவ சர்வதிகாரி அல் சிசி என்பவரால் நிர்வகிக்கப்படும் எகிப்து, அமெரிக்காவிடம் தொடர்ந்து நிதி பெற்று வருவதால், தொடர்ந்து இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. காசாவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டாலும் கூட, இஸ்ரேல் போடும் உத்தரவுக்கு கட்டுப்படும் நாடாக இருந்து வருகிறது. இதனால் ஹவுத்திக்களின் நடவடிக்கை, இஸ்ரேல் உடன் சேர்ந்து, எகிப்துக்கு “செக்” வைத்துள்ளது.
எகிப்துக்கு இது இவ்வாறு நட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் தனது ஈழட் நகர துறைமுகத்தையே மூடியுள்ளது. இதனால் இஸ்ரேலுக்கும் பல ஆயிரம் கோடி நட்டம் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.