லெபனானுக்குள் நுழைந்தால், திரும்ப மாட்டீர்கள்! இஸ்ரேல் அமைச்சருக்கு ஹிஸ்புல்லா எச்சரிக்கை!

லெபனான் மீது எந்த நேரத்திலும் போர் என இஸ்ரேல் ராணுவ அமைச்சர் எச்சரிக்கை…
லெபனானுக்குள் நுழைந்தால் திரும்ப முடியாது என ஹிஸ்புல்லா பதிலடி
ஹமாஸ் உடன் போர் நடைபெற்று வரும் இந்த நிலையிலோ, அல்லது போர் முடிந்த பிறகோ, லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவ அமைச்சர் கேலண்ட் தெரிவித்துள்ளார்.
அந்தத் தாக்குதல் வேகமானதாக, துல்லியமானதாக, அதிர்ச்சி தரக்கூடிய தாக்குதலாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சிறிய அளவில் மட்டுமே பலத்தை பயன்படுத்தி வருவதாகவும், இனி வரும் காலங்களில் முழு பலத்தையும் கொண்டு தாக்குவோம் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இதற்கு கடும் பதிலடியைக் கொடுத்துள்ளார் ஹிஸ்புல்லாவின் ஜெனரல் ஹசன் நஸ்ருல்லா. இஸ்ரேல் தற்போது இருண்ட காலத்தில் தத்தளித்து வருவதாக தெரிவித்துள்ளார். முன் எப்போதும் இல்லாத பாதிப்பை, குழப்பத்தை இஸ்ரேல் சந்தித்துள்ளதாக கூறியுள்ளார்.
லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்து வந்தால், இஸ்ரேலின் ஒரு டாங்கி கூட மிஞ்சாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் லெபனான் பொதுமக்களை தொடர்ந்து தாக்கினால், இஸ்ரேலில் உள்ள இதுவரை தாக்குதலுக்கு ஆளாகாத புதிய இலக்குகள் தாக்கப்படும் என்றும் ஹசன் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அதன் இழப்புகளை மூடி மறைத்து வருவதாக குறிப்பிட்ட அவர், பாலஸ்தீனிய போராளிகளின் வீரத்திற்கு தான் தலை வணங்குவதாக தெரிவித்தார்.
=====