ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானத் தாக்குதல் – ஆக்கிரமிப்பு படை அதிகாரி பலி!

ஆள் இல்லா விமானங்கள் மூலம் சரமாரி தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா…
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை அதிகாரி பலி…
இஸ்ரேலின் வடக்கு பகுதியை குறிவைத்து, நாள்தோறும் தாக்குதல் நடத்தி வருகிறது ஹிஸ்புல்லா. இந்நிலையில், வியாழக்கிழமை அதிரடி தாக்குதல் ஒன்றை ஹிஸ்புல்லா நடத்தியது. பல ஆள் இல்லா விமானங்கள், ஏவுகணைகள் வீசப்பட்டன.
இதில் பலவற்றை இஸ்ரேலின் ஐயன் டோம்கள் தடுத்து வீழ்த்தின. எனினும் ஒரு ஆள் இல்லா விமானம், ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியை கண்காணித்து, இஸ்ரேல் அதிகாரி சென்ற காரை குறிவைத்து விரட்டியுள்ளது.
இதனையடுத்து, அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட நிலையில், அந்த அதிகாரி, காரை நிறுத்திவிட்டு, வீடு ஒன்றுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்துள்ளார்.
ஆனால் சில நொடிகளில் அந்த வீட்டின் மீது, ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானம், தான் சுமந்து வந்த வெடிமருந்துகளை வீசியுள்ளது. இதில் அந்த வீடு இடிந்து பலத்த தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த ராணுவ அதிகாரி பலியானார். அவர் பெயர், Valeri Chefonov என்றும் 31 வயதான முதல் வகுப்பு ரிசர்வ் படை அதிகாரி என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
==