ஹிஸ்புல்லாவும் தயார் – இஸ்ரேலில் கடும் பீதி!

எல்லையில் ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டு வரும் ஹிஸ்புல்லா…
இதுவரை பயன்படுத்தாத நவீன ஆயுதங்கள்…
தயார் நிலையில் வைத்துள்ளதால் பரபரப்பு…
லெபனானின் தெற்கு பகுதியின் பாதுகாப்பை பராமரித்து வரும் ஹிஸ்புல்லா, தனது நவீன ஆயுதங்களை தாக்குதலுக்காக நிலை நிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் அமைப்பு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் அல்மா ரிசர்ச் சென்டர் எனப்படும், வடக்கு எல்லை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்தி, இஸ்ரேலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்மா சென்டர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது, தெற்கு லெபனான், பெக்கா, பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா மிசல்ஸ்கள் மற்றும் ராக்கெட் தொகுப்புகளை தயார் நிலையில் வைத்துள்ளது.
குறுகிய தூர ராக்கெட்டுகள், 3000 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும், அதாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் மிசல்ஸ்கள், க்ரூஸ் மிசல்ஸ்கள், கடல் ஏவுகணைகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட பல வகையான ஆயுதங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக பெக்கா மற்றும் பெய்ரூட்டில் பாலிஸ்டிக், க்ரூஸ், கடல் ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த ஆயுதங்களை இதுவரை ஹிஸ்புல்லா பயன்படுத்தவில்லை.
ஹிஸ்புல்லா தளபதி ஃபவுத் சுக்கூர் படுகொலைக்கு பழி தீர்க்க மிகப்பெரிய தாக்குதலை நடத்த உள்ளதாக அந்த அமைப்பு கூறிய நிலையில், இந்த புதிய ஆயுதங்கள் அதற்காக பயன்படுத்தப்படலாம்.
இந்த அனைத்து ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் ஹிஸ்புல்லா பயன்படுத்தலாம். இவ்வாறு அந்த இஸ்ரேல் ஆராய்ச்சி அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
===