100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசிய ஹிஸ்புல்லா! இஸ்ரேலில் நாள் முழுவதும் அபாய ஒலி!

ஹிஸ்புல்லா ராணுவ பிரிவு தளபதியான முகமது நெஹ்மி நாசர் என்பவர் இஸ்ரேல் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இதற்கு பதிலடியாக லெபானானில் இருந்து இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் அமைந்துள்ள இஸ்ரேலின் 2 ராணுவ நிலைகளை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் 4 பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் நபா பாராக்ஸ் என்ற ராணுவ பாசறையில் உள்ள தலைமையகத்தை குறிவைத்து, முதல் தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதல் காரணமாக தீக்கிரையான பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இஸ்ரேல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
அடுத்ததாக கிர்யத் ஸ்மோனா பகுதியில் உள்ள ராணுவ தலைமையகத்தை குறிவைத்து, பலாஹ் என்ற ராக்கெட் மூலம் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. 3வதாக கேலா பாராக்ஸ் என்ற இஸ்ரேலின் ராணுவ பாசறையை தலைமையகத்தை குறிவைத்து Grad-type ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.
4வது மிக முக்கியத் தாக்குதலாக, 500 கிலோ வெடி மருந்துகளை சுமந்து சென்று தாக்கும் புர்கான் ராக்கெட்டுகள் மூலம் இஸ்ரேலின் சார் இட் ராணுவ நிலை மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது.ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களால் மேற்கு அப்பர் அல் ஜலீலி பகுதியில் புதன்கிழமை முழுவதும் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் அல் ரிஹேப் ராணுவ நிலை மீது தொடர்ந்து பல மணி நேர பீரங்கி தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் பாதுகாப்பு கோபுரங்கள் தகர்க்கப்பட்டுள்ளன.
====