சினிமா

ஒரே நேரத்தில் 10 படத்தில் ஹீரோ! இந்தியாவில் யாரும் நிகழ்த்தாத சாதனை! கைதான நேரத்தில் நன்றி இல்லாமல் பணத்தை திருப்பிக் கேட்ட தயாரிப்பாளர்கள்!

நைட்டீன் பாஃட்டீஸ் ல (1940) ஒரு இந்தியன் ஆக்டர்க்கு ஒரே டைம்ல 10 மூவி புக் ஆனதுனா, அது நம்ம பாகவாதர்க்கு தான். அதுக்கு முக்கியமான காரணம், ஹரிதாஸ் மூவியோட வெற்றி. இந்தப் படம் மூனு தீபாவளிக்கு சென்னை பிராட்வே தியேட்டர்ல தொடர்ந்து ஓடிக்கிட்டே இருந்துச்சு… இத பார்த்து தான் இன்னைக்கு பவர் ஸ்டார்ல இருந்து எல்லா ஸ்டாரும் காசு கொடுத்தாவது, வருசக் கணக்குல படத்த ஓட்டறதற்கு முயற்சி பண்ணிட்டு இருக்காங்க… ஆனா பாகவாதர் காசு கொடுத்து ஓடவைக்கல, ஆர்கானிக்காவே அவரது படம் ஓடுச்சு.அதுமட்டுமில்லாம, தமிழ்ல முதல் சூப்பர் ஹிட் படம்னா அது இவர் நடிச்ச சிந்தாமணி. இந்த படத்த தயாரிச்ச மதுரைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், கிடைச்ச லாபத்தை வச்சு தான், சிந்தாமணிங்கிற பேருல தியேட்டரையும் கட்டி இருக்காங்க..

இந்த தொடர் வெற்றிகளை பார்த்த மற்ற தயாரிப்பாளர்கள், பாகவாதர் வீட்ட சுற்றி வளைச்சு, வாய்ப்பு கேட்டு கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க… இவரு தான் அள்ளி அள்ளி கொடுப்பவராச்சே… அதனால ஒரே டைம்ல 10 பேருக்கும் ஓகே சொல்லிட்டார்.இத கொண்டாடும் விதத்துல ஒரு விளம்பரத்தையும் நியூஸ் பேப்பர்ல வெளியிட்டார் பாகவாதர். பாகவாதர் வெள்ளைக் குதிரை மீது அமர்ந்திருப்பார். அவரை சுற்றி 10 நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரங்களில் 10 படங்களின் பெயர்கள் இருந்தது.இந்த நிலைல தான் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமா, லட்சுமி காந்தன் என்ற பத்திரிக்கையாளர் கொலை வழக்குல பாகவாதர் கைது செய்யப்பட்டாரு. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

இந்த நிலைல பாகவாதர் சிறைச்சாலைல அடைக்கப்பட்டிருந்த நேரத்தில, வாய்ப்பு கேட்டு கெஞ்சிய சில தயாரிப்பாளர்கள், திடீர்னு, கொடுத்த அட்வான்ஸ் பணத்த திருப்பிக் கேட்க ஆரம்பிச்சாங்க… அந்த நேரத்தில பாகவாதர் வழக்குக்காக தன்னுடைய சொத்துக்கள ஒன்னொன்னா வித்து, ரொம்ப பணக் கஷ்டத்துக்கு ஆளானாரு. தயாரிப்பாளர்களும் பணத்தை கேட்டது அவருக்கு ரொம்பவும் வேதனையாக ஆயிடுச்சு. இந்த சினிமாக் காரங்க தங்களோட புத்திய காட்டிடாங்கனு ரொம்பவும் மனசு உடைஞ்சு போய்ட்டாராம்.சுமார் 3 வருசத்துக்கு அப்றோம், வழக்கில இருந்து பாகவாதர் விடுதலையாகி வந்திட்டாரு. அவரோட ரசிகர்கள், இத பெரிய விழாவ கொண்டாடி இருக்காங்க… அதே நேரம் மறுபடியும் பல தயாரிப்பாளர்கள் பாகவாதர் வீட்டுக்கு அணிவகுத்திருக்காங்க… அந்த டீம்ல, பணத்தை திருப்பி கேட்ட கல்பிரிட்ஸ்சும்இருந்திருக்காங்க…

பாகவாதர சந்திச்சு, பழச எல்லாம் மறந்திடுங்க… நீங்க திரும்பவும் பழைய பாகவாதரா வரணும்னு சொல்லி இருக்காங்க… இதெல்லாம் அமைதியா கேட்ட பாகவாதர் இனி மேல் நான் சினிமால நடிக்கப் போறதில்லைனு திடீர் ஒரு குண்ட போட்டாரு.என்ட அட்வான்ஸ் பணத்தை திரும்பி கேட்ட தயாரிப்பாளர்கள் மேல எனக்கு எந்த கோவமும், இல்லை, அதுக்காக வேண்டி நான் இந்த முடிவ எடுக்கல, எனக்கு சினிமா வேண்டாம், நான் பழைய படி கச்சேரி மட்டும் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கே. என்ன தொந்தரவு பண்ணாதீங்கனு சொல்லிட்டாராம்.இது தயாரிப்பாளர்கள மட்டுமின்றி, ரசிகர்களை ரொம்பவும் வேதனை அடைய வச்சிடுச்சு. அதெல்லாம் முடியாது நீங்க மறுபடியும் நடிச்சே ஆகனும்னு உண்ணாரவிரதம் லாம் இருந்தாங்கலாம். ஒரு நடிகர நடிக்கச் சொல்லி, உண்ணாவிரதம் இருந்ததும் அது தான் ஃபர்ஸ் டைம்.இதுக்கும் தியாராஜபாகவர் மொத்தத்துக்கே 14 படங்கல்ல தான் நடிச்சிருக்காரு. அதுலயே இவ்வளவு பேரும் புகழும் அவருக்கு கிடைச்சிருக்குனா, அந்த காலத்துல அவருக்கு எவ்வளவு பெரிய வரவேற்பு இருந்திருக்கும்னு பாருங்க…இதுமாதிரி மேலும் பல சுவாரஸ்மான வீடியோக்களை பார்க்க நம்ம Q7 சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க… நன்றி…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button