சினிமா

ஹீராமண்டி – தி டைமன்ட் பசார்! உயர் குடிகளின் அட்டூழியத்தை தோலுரித்த காவியம்!

ஆங்கிலேயர்களுக்கு அடிமை சேவகம் செய்த உயர்குடிகள் பேசப்படாத எளிய மக்களின் தியாகங்கள் காவியம் படைத்த இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி…

வரலாற்று திரைப்படங்களை தயாரித்து வரும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய படைப்பாக ஹீராமண்டி தி டைமன்ட் பசார் வெப் தொடர் நெட்பிளிக்சில் வெளியாகி, 190 நாடுகளில் ஒளிபரப்பாகியுள்ளது.

தற்போதைய பாகிஸ்தானின் லாகூர் நகரில் இந்திய விடுதலைக்கு முன்பு நடந்த சம்பவங்கள் தத்ரூபமாக, கடின உழைப்பின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நகரத்திற்கே சென்றது போல் காட்சிகளை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

அன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்த, நவாப்கள், எப்படி ஆங்கிலேயர்களுக்கு அடிமைச் சேவகம் புரிந்தனர், தங்களுடைய இச்சைகளை தீர்க்க அவர்களால் உருவாக்கப்பட்ட, உயர் வகுப்பு விபச்சார விடுதிகள் பற்றி, கதை விரிவடைகிறது. நவாப்களுக்கு பிறக்கும் தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் படும் அவஸ்தைகள், துன்பங்களை இயக்குநர் வெளிக்காட்டியுள்ளார்.

heeramandi review: 'Heeramandi' review: Netizens laud Sanjay Leela Bhansali's period drama as a captivating spectacle - The Economic Timesஅதே நேரம் அதே நவாப் குடும்பங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள், இந்திய விடுதலைக்காக உயிர் தியாகம் வரை, பல்வேறு தியாகங்கள் செய்ததையும் இயக்குநர் குறிப்பிடத் தவறவில்லை.

நவாப்களால் விபச்சாரிகள் ஆக்கப்பட்ட பெண்கள், இந்திய விடுதலைக்காக தாங்கள் ஈட்டிய வருமானத்தை எவ்வாறு செலவு செய்தனர், எவ்வாறு உயிர் தியாகங்களை செய்து, சுதந்திர நெருப்பை பற்ற வைத்தனர் என்பதை தத்ரூபமாக காட்டியுள்ளார் இயக்குநர்.

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த வெப் தொடரில், சோனாக்ஷி சின்கா, அதிதி ராவ் ஹைதரி, மனிஷா கொய்ராலா, ரிச்சா சத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். இதே போல் தாஹா ஷா பாதுஷா, பர்தீன் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

விமர்சன ரீதியிலும், வணிக ரீதியிலும் இந்த வெப் தொடர் வரவேற்பை பெற்றுள்ளது.
எழுத்தாளர் மொயின் பேக் என்பவரின் புத்தகத்தை தழுவி இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button