அறைக்குள் நுழைந்து அத்துமீறி நடந்து கொண்டார்! மலையாள நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்!

மலையாள நடிகை மினு முனீர் கேரள திரைத்துறையைச் சேர்ந்த 7 முக்கிய நபர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். இதில் மிக முக்கியமானவர் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவும், பிரபல நடிகருமான முகேஸ் ஆவார்.நடக்காமே உலகம் என்ற படத்தின் படிப்பிடிப்பின் போது, தனது அறைக்கு வந்த முகேஸ், திடீரென கட்டிலில் தள்ளி, அவரும் அதில் ஏறி, தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டார். பிறகு அவரை அங்கிருந்து தள்ளிவிட்டு, அறையை விட்டு வெளியே ஓடி வந்ததாக கூறியுள்ளார்.
ஏற்கனவே பலமுறை இவ்வாறு தவறாக நடக்க முயற்சித்ததால், அவருடன் விலகி, அவரை தொடர்ந்து தவிர்த்து வந்ததாகவும், ஆனால் தன்னை விடாமல் தொடர்ந்து, முகேஸ் தொந்தரவு செய்து வந்ததாகவும் நடிகை மினு கூறியுள்ளார்.கேரள நடிகர் சங்கமான “அம்மா” வில் உறுப்பினராக சேர்வதற்கு பரிகாரமாக, தன்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என முகேஸ் கூறி வந்ததாகவும், அப்படி செய்யாவிட்டால் உறுப்பினராக முடியாது என மிரட்டியதாகவும் மினு கூறியுள்ளார்.இந்த மிரட்டல்கள், துன்புறுத்தல்கள் காரணமாக திரைத்துறையை விட்டே தான் விலகியதாகவும், 47 வயதான நடிகை மினு முனீர் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி கடந்த 2017ஆம் ஆண்டு மற்றொரு மலையாள நடிகை, தனது தாயாரிடம் நடிகர் முகேஸ் அத்துமீறி நடந்து கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார்.ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து, நடிகர் முகேஸ் மீதான பகிரங்க குற்றச்சாட்டுக்கள் கேரள திரைத்துறையை மட்டுமின்றி கேரள அரசியலையும் உலுக்கியுள்ளது. இதனிடையே கேரள அரசின் சினிமா குழுவில் இருந்து நடிகர் முகேஸ் நீக்கப்பட்டுள்ளார்.எனினும் தன்மீதான குற்றச்சாட்டுக்கள், அரசியல் பின்புலம் கொண்டவை என்றும், தன்னை பிளாக் மெயில் செய்து பணம் பறிக்க நடிகை மினுவும் அவரது கணவரும் முயற்சித்ததாக நடிகர் முகேஸ் புகார் எழுப்பியுள்ளார்.