சினிமா

“ஒரு மணி நேரம் தொடர்ந்து துன்புறுத்தினார்” 300 படங்களில் நடித்த ஜாம்பவான் நடிகர் மீது புகார்!

கேரள திரையுலகில் ஆண் ஆதிக்கம் நிலவுவதாகவும், பெண் நடிகர்களை பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் நீதிபதி ஹேமா கமிட்டி பரபரப்பை அறிக்கையை தாக்கல் செய்தது.இதனையடுத்து, பல நடிகைகள் முன்வந்து தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை புகாராக அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ரேவதி சம்பத் என்பவர், பிரபல நடிகர் சித்திக் மீது பரபரப்பு புகார்களை தெரிவித்துள்ளார்.தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி, ஹோட்டல் மஸ்கட்டிற்கு தன்னை அழைத்த சித்திக், அறைக்குள் சென்ற பிறகு, வேறுமாதிரியாக பேசத் தொடங்கியதாக கூறியுள்ளார்.

தன்னை மகளே என்று அழைப்பதை வாடிக்கையாக சித்திக் வைத்திருந்ததாகவும், இதனால் அவரை நம்பி, ஹோட்டல் அறைக்கு சென்ற நிலையில், அங்கு அவர் வேறு மாதிரியாக பேசியதாகவும் ரேவதி தெரிவித்துள்ளார். அட்ஜஸ்ட்மென்டிற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், பெரிய நகம் வைத்திருக்கும் பெண்களை தனக்கு பிடிக்கும் கூறி, காதல் மொழியில் இச்சையை கொட்டித் தீர்த்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.கடந்த 2016ஆம் ஆண்டு தனது 21வது வயதில், அப்பா ஸ்தானத்தில் இருந்த நடிகர் சித்திக் தன்னிடம் இவ்வாறு நடந்து கொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.அவருக்கு இருக்கும் செல்வாக்கால், அவரை தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்து, அப்போது, அமைதியாக இருந்து விட்டதாகவும் ரேவதி குறிப்பிட்டுள்ளார்.

சித்திக் 300 படங்களுக்கு மேல் நடித்த, மலையாள திரையுலகின் செல்வாக்கு மிக்க நடிகர் ஆவார். மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் பொதுச் செயலாளராக இருந்தார். பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதே நேரம் தனது புகழுக்கு களங்கள் விளைவிக்கும் நோக்கத்தோடு, பொய் குற்றச்சாட்டுகளை தன்மீது சுமத்துவதாக கூறி, கேரள டிஜிபி அலுவலகத்தில் நடிகை ரேவதி மீது புகார் அளித்துள்ளார். எனினும் ரேவதி அளித்த புகாரின் பேரில் சித்திக் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button