பிரியும் மனைவி? – ரூ. 63 கோடி சொத்துக்களை இழக்கும் ஹர்திக் பாண்டியா? இந்தச் செய்திகள் உண்மையா?

ஹர்திக் பாண்டியா, நடாஷா தம்பதி விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியாகி வரும் செய்திகள்…70 சதவீத சொத்துக்களை ஜீவானம்சமாக கொடுக்க உள்ள ஹர்திக் பாண்டியா?இந்த செய்திகள் உண்மையா? நடந்தது என்ன?மும்பை இந்தியன் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை, அவரது மனைவி விவாகரத்து செய்ய உள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து தம்பதி இருவரும் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பதால், அவர்களது ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஹர்திக் பாண்டியா, தனது காதலியான, செர்பிய மாடல் அழகி மற்றும் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். கல்யாணம் முடிந்த 7 மாதங்களிலேயே அவர்களுக்கு அகஷ்திக் என்ற குழந்தை பிறந்தது.இந்த நிலையில், ரெடிட் பயனாளர் ஒருவர், தம்பதிகள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும், அதற்கு ஆதாரமாக நடாஷா தனது இண்ஸ்ட்கிராம் பக்கத்தில், தனது பெயருடன் இணைந்திருந்த, பாண்டியா என்ற வார்த்தையை நீக்கியதாக குறிப்பிட்டார்.
மேலும் நடாஷாவின் பிறந்த நாளுக்கு ஹர்திக் பாண்டியா வாழ்த்துச் சொல்லவில்லை என்றும், இருவரும் இணைந்த புகைப்படங்களை, சமீப காலமாக இருவரும் வெளியிடவில்லை என்றும், மும்பை இந்தியன் அணியின் ஆட்டங்களை காண நடஷா வரவில்லை உட்பட பல காரணங்களை கூறி இருந்தார்.இந்த செய்திகளை முன்னணி ஆங்கில இணையதளங்கள் வெளியிட்ட நிலையிலும், இதுகுறித்து நட்சத்திர தம்பதி எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.
இதனால் இந்தச் செய்திகள் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் இரு தரப்பு ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.மேலும் ஒரு வேளை விவாகரத்து நடந்தால், ஹர்திக் பாண்டியா தனது சொத்தில் இருந்து 70 சதவீதத்தை நடாஷாவுக்கு ஜீவானம்சமாக கொடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. தற்போது, ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு, 91 கோடி ரூபாய் என்றும், இதில் 63 கோடி ரூபாயை அவர் ஜீவானம்சமாக கொடுக்க வேண்டியது இருக்கும் என FREE PRESS JOURNAL இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக வதந்திகள் றெக்கை கட்டி பறந்து வரும் நிலையில் நடாஷா, தனது ஆண் நண்பர் ஒருவருடன், மும்பையில் காப்பி ஷாப் ஒன்றுக்கு செல்லும் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அப்போது, விவாகரத்து குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.