இஸ்ரேலின் வெடிக்காத குண்டுகளை எடுத்து பயன்படுத்தும் ஹமாஸ்!

இஸ்ரேல் தனது போர் விமானங்களில் இருந்து வீசும் வெடிகுண்டுகள் சில நேரம் வெடிக்காமல் செயல் இழக்கும் நிலையில் அவற்றை பயன்படுத்தி பாலஸ்தீன குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா போர் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நிறுவனமான Institute for the Study of War (ISW) and Critical Threats Project report (CTP) தெரிவித்துள்ளது.இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் ஒரு பகுதியில் இருந்து வெளியேறிவிட்டால் மீண்டும் அந்தப் பகுதிக்குள் ஹமாஸ் செயல்பட தொடங்கி விடுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கான் கான் யூனுஸ்ன் பல பகுதிகளில் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து ஆக்கிரமிப்பு ராணுவம் வெளியேறி நிலையில் அப்பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி விட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.மேலும் அப்பகுதியில் இருந்து தயாரிக்கப்பட்டு அங்கிருந்து இஸ்ரேல் படையினரை நோக்கி வீசப்பட்ட பல வெடிகுண்டுகளை ஆய்வு செய்த போது திடுக்கிடும் உண்மை வெளியானது.அந்த வெடிகுண்டுகள் அனைத்தும் இஸ்ரேலின் F 16 போர் விமானத்திலிருந்து வீசப்பட்ட இஸ்ரேலின் வெடிகுண்டுகள் ஆகும்.
சில நேரங்களில் விமானங்களில் இருந்து வீசப்படும் வெடிகுண்டுகள் வெடிக்காமல் தானாகவே செயலிழக்கும் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி, புதுப்பித்து மீண்டும் இஸ்ரேல் படையினருக்கு எதிராகவே ஹமாஸ் பயன்படுத்திருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.கடந்த 10 மாதங்களாக காசாவில் நடைபெறும் தொடர் போர் காரணமாக அங்குள்ள மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட எந்த வசதிகளும் கிடைக்கப் பெறவில்லை.
பல்வேறு உலக நாடுகள் மிகப்பெரிய அளவில் காசா மக்களுக்காக உதவி வரும் நிலையில் கூட, அந்த நிவாரண பொருட்கள் காஸாவிற்கு சென்றடையாமல் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.இதற்கு முக்கிய காரணம் நிவாரண பொருட்களை ஹமாஸ் அமைப்பினர் தங்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று இஸ்ரேல் காரணம் கூறி வருகின்றது.அப்படி இருந்தும் ஹமாஸ் தொடர்ந்து இஸ்ரேலை எதிர்த்து 312 வது நாளாக போரிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.