உலகம்

இஸ்ரேலுக்கு கடும் நெருக்கடி – புதிய தலைவரை அறிவித்த ஹமாஸ்!

யஹ்யா சின்வரை தலைவராக அறிவித்தது ஹமாஸ்…
இஸ்மாயில் ஹனியாவை விட இஸ்ரேலுக்கு பல மடங்கு ஆபத்தானவர்…
ஹமாசின் முடிவால் நெருக்கடியில் நெதன்யாகு…

அக்டோபர் 7 தாக்குதலின் காரண கர்த்தா எனக் கூறப்படும் காசாவின் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரை, உயர்மட்ட அரசியல் குழுத் தலைவராக அறிவித்து, இஸ்ரேலுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது ஹமாஸ்.
இஸ்ரேலால் கொல்லப்பட்ட இஸ்மாயில் ஹனியே, உலக நாடுகளாலும், அரபு நாடுகளாகலும் மிதவாத தலைவராக பார்க்கப்பட்டவர்.

அவரை கொன்று, உலக அரங்கில் சூப்பர் ஹீரோவாக தன்னை காட்டிக் கொண்டது இஸ்ரேல்.
ஆனால் தெக்ரானில் வைத்து இந்தக் கொலையை அரங்கேற்றியதால், ஈரானின் கடும் தாக்குதலை எதிர்கொள்ள அச்சத்துடன் காத்திருக்கிறது இஸ்ரேல்.

Hamas Gaza-based leader Yahya Sinwar to replace slain political chief Ismail Hanieyh - Al-Monitor: The Middle Eastʼs leading independent news source since 2012

நெதன்யாகுவின் இந்த தவறான நடவடிக்கையால், 90 லட்சம் இஸ்ரேலியர்கள், ஒவ்வொரு நிமிடத்தையும் அச்சத்துடன் கழித்து வருவதாக, அம்பலப்படுத்தினார் இஸ்ரேல் எதிர்கட்சித் தலைவர் யாயிர் லாபித். இந்நிலையில் ஈரானின் தாக்குதலை விட, மாபெரும் அதிர்ச்சியை இஸ்ரேலுக்கு தற்போது வழங்கியுள்ளது ஹமாஸ்.

அக்டோபர் 7 தாக்குதலுக்கு காரண கர்த்தா என இஸ்ரேலால் குற்றம்சாட்டப்படும் யஹ்யா சின்வரை, “உயிருடன் உள்ள இறந்த மனிதர்” என இஸ்ரேல் விமர்சித்தது. அதாவது அவர் தற்போது உயிருடன் இருந்தாலும், இறந்ததற்கு சமம். அவர் எப்படியும் கொல்லப்படுவார் என கூறி இருந்தது.

இந்த நிலையில், அவரை சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை பெறும் பதவிக்கு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஹமாஸ். இனி இஸ்ரேல் கைதிகள் மீட்கப்பட வேண்டும் என்றால், அதற்கான விதிமுறைகளை வகுக்கும் உச்சகட்ட இடத்தில் யஹ்யா சின்வர் இருப்பார்.

காசாவில் கடந்த 10 மாதங்களாக சுரங்கத்தில் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் யஹ்யா சின்வர், அரசியல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், கத்தார், எகிப்து, ஈரான் அல்லது லெபனான் ஆகிய ஏதாவது ஒரு நாட்டில் பாதுகாப்புடன் புகலிடம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

=================

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button