உலகம்

மாபெரும் சம்பவம்!

இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் கப்பல்களை குறிவைத்து தாக்கி வரும் ஏமன் ஹவுத்திப் படைகள் அண்மையில் நடத்தியுள்ள தாக்குதல் ஹாலிவுட் படங்களையே விஞ்சும் வகையில் அமைந்துள்ளது.இஸ்ரேல் துறைமுகத்துக்கு சென்றதாக கூறப்படும் பிரிட்டனுக்கு சொந்தமான Cordelia Moon என்ற சரக்கு கப்பலை குறிவைத்து சரமாரி தாக்குதல் நடத்தினர்.

8 பாலிஸ்டிக்ஸ் மற்றும் குரூஸ் மிசல்ஸ்கள், ஒரு ஆள் இல்லா விமானம், ஒரு ஆளில்லா படகு ஆகியவை மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஆனால் பிற ஆயுதங்கள் கப்பலை நேரடியாக தாக்கவில்லை. கப்பல் அதிகாரிகளை எச்சரிப்பதற்காக, அடையாள தாக்குதல்களாக அவை அமைந்தன. அதே நேரம் ஆள் இல்லா படகு மூலம் கப்பலை சேதம் படுத்த வேண்டும் என்ற ஹவுத்திக்களின் திட்டம் நிறைவேறியது.


பிரிட்டன் கப்பலை ஆள் இல்லா படகு நெருங்கிய போது, அந்த படகை சுட்டு வீழ்த்துவதற்கு கப்பல் பாதுகாப்பு படையினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த ஆள் இல்லா படகு சரக்கு கப்பலை தாக்கி, பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியது.எனினும் கப்பல் தொடர்ந்து, இயங்கியதாகவும், அருகே உள்ள துறைமுகத்தை நோக்கி கப்பல் செலுத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

எனினும் கப்பல் பலத்த சேதம் அடைந்துள்ள நிலையில், மீட்கப்படுமா, அல்லது தண்ணீரில் மூழ்குமா என்பது பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.இஸ்ரேல் துறைமுகங்களுக்கு, செங்கடல் வழியாகச் சென்றால் நிச்சயம் தாக்குவோம், இதில் சமரசத்திற்கு இடமில்லை என ஹவுத்திப்படைகள், உலக கப்பல் நிறுவனங்களுக்கு புதிய இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button