பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பலாத்கார முயற்சி அல்ல – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!

ஒரு பெண்ணின் மார்பகங்களை பிடிப்பது, பைஜாமாவைக் கிழிப்பது, பாலத்துக்கு அடியில் இழுத்துச் செல்வதெல்லாம் பாலியல் பலாத்கார முயற்சி வழக்கில் சேர்க்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.2021ம் ஆண்டு இரண்டு இளைஞர்கள் 11 வயது சிறுமியை பாலத்திற்கு அடியில் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமியின் பைஜாமாவைக் கழற்றி, பேண்டைக் கிழிக்க முயன்றுள்ளார். சிறுமியின் அலறலைக் கேட்டு இளைஞர்கள் ஓடிய நிலையில், இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பவான், ஆகாஷ் என்ற இரண்டு இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றச்சாட்டப்பட்ட இளைஞர்கள் இருவரும், கஸ்காஞ்ச் நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை அதை ரத்து செய்ய வேண்டுமென மனு தாக்கல் செய்தனர். அந்த மனு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் “தாங்கள் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும்” மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை நீதிபதி ராம் மனோகர் நாராயன் மிஸ்ரா, “குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாலியல் வன்கொடுமைக்கான முயற்சி தானோ தவிர, பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆகாது என அதிர்ச்சிக்கரமான கருத்தை தெரிவித்தார். அதாவது அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய தயாரானார்களோ தவிர குற்றமே செய்துவிட்டதாக கூற முடியாது எனக்கூறியுள்ளார்.
தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட ஆகாஷ் சிறுமியை பாலத்துக்கு கீழே கொண்டு சென்று அவரின் பைஜாமை கிழித்துள்ளார். இதை எந்த சாட்சியும் பார்க்கவில்லை, இந்த செயல்பாட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி நிர்வாணமாக்கப்படவில்லை, ஆடைகள் கழற்றப்படவில்லை. ஆதலால், பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் பலாத்காரம் என்ற குற்றச்சாட்டு பொருந்தாது, குற்றம்சாட்டப்பட்டவரும் பாலியல் பலாத்கார முயற்சியும் செய்யவில்லை.ஒரு பெண்ணின் மார்பகங்களை பிடிப்பது, பைஜாமாவைக் கிழிப்பது, பாலத்துக்கு அடியில் இழுத்துச் செல்வதெல்லாம் பாலியல் பலாத்கார முயற்சி வழக்கில் சேர்க்க முடியாது. ஆதலால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பிரிவை ரத்து செய்து அதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரை ஐபிசி பிரிவு 354 (பி) மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 10 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கலாம் எனத் தீர்ப்பளித்தார். பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில், அலகாபாத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.