தங்க வைர நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம், ஒரு வருடத்திற்கு தேவையான அனைத்தும்…!

தங்க வைர நகைகள் முதல் ஒரு வருடத்திற்கு தேவையான சமையல் பொருட்கள் வரை….
50 ஏழை தம்பதிகளுக்கு அம்பானி குடும்பம் நடத்தி வைத்த திருமணம்…
ஆனந்த் அம்பானி திருமணம் ஜுலை 20 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்பே பல நிகழ்ச்சிகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து விட்டனர்.
இந்த நிலையில் புனேயில் 50 ஏழை தம்பதிகளுக்கு அம்பானி குடும்பத்தினர் இலவச திருமணம் செய்து வைத்தனர்.
மண மக்களுக்கு அவர்கள் அளித்த பரிசுப் பொருட்கள் அனைவரையும் பேச வைத்துள்ளது.
தங்க தாலி, தங்க மோதிரம், தங்க மூக்குத்தி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதே போல் வெள்ளியில் மெட்டி, கொழுசு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ. 1 லட்சம் ரூபாய்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி ஒரு வருடத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நின்று விடவில்லை 36 வகையான பாத்திரங்கள், கேஸ் ஸ்டவ், மிக்ஸி, மின்விசிறி, போர்வை, தலையணை ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் அன்னதான சேவை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் 800 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
ஜியோ டேஃரிப் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பதால், மக்கள் கடும் அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் உள்ள நிலையில், அம்பானி குடும்பம் மீது உள்ள கோபத்த தணிக்கும் வகையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.