உலகம்

10வது மாதத்தில் காசா – வீழ்த்த முடியா போராளிகள்!

10வது மாதத்தில் அடியெடுத்து வைக்கும் காசா போர்…
சோர்வடையாமல் வீர சமர் புரியும் காசா போராளிகள்…
இஸ்ரேல் தரப்பு அண்மை பலி விபரங்கள்…

50 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றுகையிடப்பட்ட நிலம் காசா. தனி நாடு கிடையாது. ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு நடுவே அரை நூற்றாண்டை கடந்து விட்டது. அந்த துண்டு நிலம் மீது கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி போரை அறிவித்தது இஸ்ரேல். தற்போது, 9 மாதங்கள் முடிந்து, 10 வது மாதத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது, இஸ்ரேலின் தாக்குதல்கள்.

சில ஆயிரம் பேர்களை மட்டுமே கொண்ட ஹமாஸ் படையை, சில மாதங்களில் இஸ்ரேல் வீழ்த்தி விடும் என உலகம் நம்பிய நிலையில், தற்போது, 275 நாட்கள் கடந்துவிட்டது. 275வது நாளிலும் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளனர் காசா போராளிக்குழுக்கள். அப்படியென்றால் இத்தனை நாட்கள் இஸ்ரேல் படைகள் என்ன தான் செய்து கொண்டிருந்தன.

பொதுமக்களை மட்டுமே குறிவைத்து கொன்று கொண்டிருந்தனர். பேராளிப் படைகளுடன் அவர்கள் மோதி, முழு வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, உயிரிழந்த இஸ்ரேல் வீரர் மற்றும் காயமடைந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரபாவில் நடைபெற்ற சண்டையில் கம்பெனி கமாண்டராக இருந்த மேஜர் ஜலா இப்ராஹெம் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து கொல்லப்பட்ட இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே ரபாவில், கவச வாகன படைப்பிரிவு கமாண்டர், லெப்டினென்ட் கர்னல், டேனியல் எல்லா என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். பாலஸ்தீன் போராளிக்குழுவைப் சேர்ந்த ஸ்னைப்பர் குறிபார்த்து சுட்டதில், உயிர் பிரியும் நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தங்களது தாக்குதல் விபரங்களை பாலஸ்தீன் குழுக்கள் வெளியிட்டுள்ளன.


காசா சிட்டியின் அல் சுஜேயா பகுதியில் இஸ்ரேலின் மெர்க்காவா டாங்கியை தங்களது அல் யாசின் என்ற கவச எதிர்ப்பு ஏவுகணை மூலமாக தகர்த்துள்ளதாக ஹமாசின் அல் கஸ்ஸாம் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஹமாஸ் பாலஸ்தீனத்தில் உருவாக்கிய பிரத்யேக ஏவுகணை ஆகும்.

இதே போல் ரபாவில் அல்யாசீன் ஏவுகணை மூலம் மற்றொரு மெர்க்காவா டாங்கியை தகர்த்ததாகவும், அதே பகுதியில் 3வது மெர்க்காவா டாங்கியை, Shawaz explosive device என்ற ஏவுகணை மூலம் தகர்த்துள்ளதாக அல் கஸ்ஸாம் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதே போல் அல்சுஜேயா பகுதியில், இஸ்ரேல் படையினர் மீது, எரிகணைகள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியதாக மற்றொரு போராளிக்குழுவான அல் குத்ஸ் படை தெரிவித்துள்ளது. இதே போல் தெற்கு எல்லையான ரபா நகரத்திலும், கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகள், எரிகணைகள் மூலம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளுடன் நேருக்கு நேர் சண்டையிட்டதாக அல்குத்ஸ் படைத் தெரிவித்துள்ளது.

இதே போல் அல் சுஜேயா பகுதியில் இஸ்ரேல் கவச வாகனங்கள் மீது எரிகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக மற்றொரு போராளிக்குழுவான அல் அக்ஸா தியாகிகள் படை அறிவித்துள்ளது. இதே போல் காசா சிட்டி பகுதியில் 107mm rocketகள், எரிகணைகள் மூலமாகவும், ரபாவில் தகுந்த ஆயுதங்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியதாக அல் அக்ஸா தியாகிகள் படை அறிவித்துள்ளது.

இதே போல் அல்சுஜேயா பகுதியில் இஸ்ரேல் படைகள் மீது 60mm mortars எரிகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக மற்றொரு போராளிக்குழுவான Abu Ali Mustafa படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
================

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button