தந்தையின் கையெழுத்தை போலியாக போட்டு, ஏமன் மீது போர் – சவுதி இளவரசர் மீது புகார்!

ஏமன் மீது போர் தொடுத்த சவுதி இளவரசர் மீது புதிய புகார்…
தனது தந்தையின் கையெழுத்தை போலியாக போட்டதாக குற்றச்சாட்டு…
சவுதி பட்டத்து இளவரசர் முகமது தனது தந்தையும் மன்னருமான 88 வயத சல்மானின் கையெழுத்தை போலியாக போட்டு, ஏமன் மீது போர் தொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏமன் நாட்டை அமெரிக்கா மற்றும் சவுதி ஆதரவு ஆட்சியாளர்கள் ஆண்டு வந்தனர்.
அவர்களுக்கு எதிராக ஹவுத்தி பழங்குடியினர் போர் அறிவிப்பை வெளியிட, உள்நாட்டுப் போர் வெடித்தது. இதில் அரசுப் படைகளை துவம்சம் செய்து, பெரும் பகுதிகளை ஹவுத்திப் பழங்குடி படைகள் கைப்பற்றின. இந்த போரில் சவுதி அரேபியா திடீரென தலையிட்டு, ஏமன் மீது அமெரிக்க போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்தன.
இந்தப் போரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சத்து 37 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலனவர்கள் குழந்தைகள், பெண்கள். இருப்பினும் சவுதி அரேபியாவை ஏமன் ஹவுத்திப்படை தோற்கடித்து, தலைநகர் சனாவை கைப்பற்றி தங்களது அரசை வெற்றிகரமாக நிறுவினர்.
இந்நிலையில், இந்த போர் சம்பந்தமாக ஒரு புதிய பரபரப்புத் தகவலை சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் சவுதி உளவுத்துறை அதிகாரி Saad al-Jabri வெளியிட்டுள்ளார். பிபிசி ஊடகத்திடம் அவர் கூறியுள்ளதாவது, 88வயதான மன்னர் சல்மான் வயது முதிர்வின் காரணமாக, புத்தி தடுமாற்றத்தில் உள்ளதாகவும், முடிவுகள் எடுக்கும் நிலையில் இல்லை என்றும், இதனைப் பயன்படுத்தி கடந்த 2015ஆம் ஆண்டு இளவரசர் முகமது, தனது தந்தையின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி, ஏமனுக்கு எதிராக போர் அறிவிப்பை வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தற்போது, சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ள முன்னாள் உளவுத்துறை அதிகாரி Saad al-Jabri யை நம்பகத்தன்மையற்ற முன்னாள் அதிகாரி எனக் குறிப்பிட்டுள்ள சவுதி, அவரை மீண்டும் நாடு திரும்ப வைப்பதற்காக, அவரது 2 மகன்களை பிணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.
இதற்கு முன்னர் சவுதி வம்சாவளி அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி, பட்டத்து இளவசர் முகமது பின் சல்மான் குறித்து எழுதியதற்காக கொடூரமான முறையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
====