உலகம்

முதல் முறையாக…

முதல் முறையாக டெல் அவிவில் உள்ள மொசாத் தலைமையகம் மீது ஹிஸ்புல்லா முக்கியத் தாக்குதலை நடத்தியுள்ளது. க்ரூஸ் மிசல்ஸ்கள் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடும் சேதங்கள் ஏற்பட்டதாக ஹிஸ்புல்லா தரப்பு கூறியுள்ள நிலையில், இஸ்ரேல் அதுபற்றிய தகவல்களை வெளியிடாமல் மறைத்துள்ளது.

25ஆம் தேதி காலை 6.30 மணியளவில் காதர் 1 என்ற க்ரூஸ் மிசல்ஸ் மூலம் இந்த தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது. பேஜர் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் அண்மை இனப்படுகொலைக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.பெய்ரூட்டை தாக்கினால், டெல் அவிவை தாக்குவோம் என்ற முழக்கத்தோடு, இந்த தாக்குதலை ஹிஸ்புல்லா அரங்கேற்றியுள்ளது.

Fighters from the Lebanese militant group Hezbollah carry out a training exercise in Aaramta village in the Jezzine District, southern Lebanon, Sunday, May 21, 2023. Hezbollah put on a show of force Sunday, extending a rare media invitation to one of its training sites in southern Lebanon, where its forces staged a simulated military exercise. (AP Photo/Hassan Ammar)

இதனால் மத்திய இஸ்ரேல் முழுவதும் அபாய எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டது. இதனால் தனது அமெரிக்க பயணத்தை பெஞ்சமின் நெதன்யாகு ஒத்திவைத்துள்ளார்.தங்களது விமானப் படை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1000 இலக்குகள் மீது குண்டு வீசி, ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்குகள், ராக்கெட் ஏவுதளங்கள், உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட இலக்குகளை அழித்ததாக இஸ்ரேல் பெருமை பேசி வந்த நிலையில், டெல் அவிவ் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.செவ்வாய்கிழமை ஒரே நாளில் ஹிஸ்புல்லா 300 ராக்கெட்டுகளை வீசியது. இதில் இஸ்ரேலின் சபெட் என்ற நகரம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இதற்கு பிறகும் ஐயன் டோம்களை நம்பி பிரயோஜனம் இல்லை என ஆக்கிரமிப்பு ஊடகங்கள் அதிருப்தியை வெளியிட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button