உலகம்

முதல் நாள் 8, இரண்டாம் நாள் 17!

இஸ்ரேல் ராணுவம் திங்கள் இரவு முதல் நான்கு நாட்களாக தெற்கு லெபனான் பகுதிக்குள் நுழைய முயற்சித்து வருகிறது. ஹிஸ்புல்லாவுடன் புதன்கிழமை நடந்த கடுமையான போரில் 8 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே வியாழன் அன்று ஒரே நாளில் 17 இஸ்ரேல் படையினரை கொன்றதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் அறிவிப்பு வெளியிடவில்லை.

புதன்கிழமை நடந்த சண்டையில் காயம் அடைந்த ஒரு இஸ்ரேல் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், ஹிஸ்புல்லா நடத்திய டேங்கர் எதிர்ப்பு ஏவுகணை தாக்குதலில் டேங்கர் வாகனத்தில் இருந்த ஒருவர் பலியாகி இருப்பதாக இஸ்ரேல் கூறி இருக்கிறது. கடந்த 2 நாட்களில் 10 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறி வருகிறது.
மேலும் வியாழனன்று நடந்த தாக்குதலில் 7 இஸ்ரேல் படையினர் பலத்த காயம் அடைந்திருப்பதாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. வியாழன் காலை இஸ்ரேல் ராணுவத்தை தெற்கு லெபனானில் உள்ள ஃபாத்திமா கேட் பகுதியில் தடுத்து நிறுத்தியதாக ஹிஸ்புல்லா தரப்புக் கூறியிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button