உலகம்

“சர்வதேச குற்றவாளிக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம்?” நெதன்யாகுவிற்கு பெண் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

போர்க்குற்றவாளி நெதன்யாகுவை கைது செய்து, சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்…
அமெரிக்க வரலாற்றில் கருப்பு நாள் என முக்கிய பெண் எம்.பி.க்கள் ஆவேசக் கருத்து…
நெதன்யாகுவின் உரையை புறக்கணித்து, எதிர்ப்பு…

காசாவில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரம் பேரை கொன்று குவித்த சர்வதேச போர் குற்றவாளி பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், அவரது பேச்சை முக்கிய அமெரிக்க பெண் எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர்.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் நெதன்யாகுவின் உரையை புறக்கணித்துள்ளார். அவர் துணை அதிபராக உள்ள நிலையில், நெதன்யாகு பேசும் போது, அவரது இருக்கை காலியாக இருக்கும் என தெரிகிறது.
ஆனால் நெதன்யாகு குறித்து எந்த தனிப்பட்ட தாக்குதலையும் அவர் நடத்தவில்லை. அதே நேரம் பிற எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

நியூயார்க் 14வது தொகுதி எம்.பி. அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், இதுகுறித்து கூறியுள்ளதாவது, சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தால் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு போர்க் குற்றவாளியை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேச வைப்பது, அமெரிக்க வரலாற்றில் ஒரு கருப்பு நாள். எனத் தெரிவித்துள்ளார்.

மிச்சிகன் தொகுதி முஸ்லீம் பெண் எம்.பி.யான Rashida Tlaib இதுப்பற்றி கூறும் போது, அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகள் இணைந்து, நெதன்யாகுவை, நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேச அனுமதித்திருப்பது, உண்மையில் பெருத்த அவமானம். அவர் கைது செய்யப்பட்டு, சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். என ஆக்ரோஷமான கருத்தை பதிவிட்டுள்ளார்.

மினிசொட்டாவின் மற்றொரு முஸ்லீம் எம்.பி.யான Ilhan Omar இதுகுறித்து கூறும் போது, போர்க் குற்றவாளியான நெதன்யாகுவிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேச எந்த அருகதையும் இல்லை. நெதன்யாகு உரையை அன்று புறக்கணித்து விட்டு, காசாவில் இருந்து விடுதலையான இஸ்ரேலியர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இதே போல் சென்னையில் பிறந்து, கேரளாவை பூர்வீகமாக கொண்ட வாஷிங்டன் எம்.பி பிரமிளா ஜெயபால் கூறும் போது, நெதன்யாகுவிற்கு போரை நிறுத்தும் எண்ணம் இல்லை. தனது அரசியலை காப்பாற்றிக் கொள்ள அவர் இப்படி நடந்து கொள்கிறார். அவர் போரை நிறுத்தும் வரை அமெரிக்காவின் எந்த உதவியும் இஸ்ரேலுக்கு கிடைக்கக் கூடாது. அவரை அழைத்தது தவறு. நான் அந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button