உலகம்

ஹிஸ்புல்லா விமானத்தை தடுக்க முடியாமல் திணறல் – இஸ்ரேல் ராணுவ கல்லூரி கடும் சேதம்!

ஹிஸ்புல்லா விமானத்தை இடைமறித்த இஸ்ரேலின் 10 ஏவுகணைகள்…

அனைத்தும் முறியடிக்கப்பட்டதால், ஆக்கிரமிப்பு ராணுவம் கடும் அதிர்ச்சி….
திட்டமிட்டபடி ராணுவ கல்லூரியை தாக்கிய ஹிஸ்புல்லாவால் பரபரப்பு…

சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி ராக்கெட் மற்றும் ஆள் இல்லா விமானங்களின் தொகுப்பை ஹிஸ்புல்லா அனுப்பியது.
லெபானான் எல்லையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிச் சென்ற ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானம், ஆக்கிரமிப்பு ராணுவத்தின் பயிற்சி கல்லூரி அமைந்துள்ள Mahava Alon base ராணுவத் தளத்தை தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வீரர்கள், அதிகாரிகள் பலி அல்லது காயம் அடைந்திருக்கலாம் என ஹிஸ்புல்லாவின் ராணுவ ஊடகம் தெரிவித்துள்ளதாக லெபனானின் அல் மாயதீன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களில் முதன் முறையாக ஹிஸ்புல்லா புதிய இலக்குகளை குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. லெபனானின் சைதா நகரத்தின் மீது தாக்குதல் நடத்தி, ஹமாசின் கமாண்டர் சமர் அல் ஹஜ் என்பவரை இஸ்ரேல் அண்மையில் கொலை செய்தது. இதற்கு பதிலடியாக புதிய இலக்குகளை தாக்கியுள்ளதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

ஹிஸ்புல்லாவின் புதிய இலக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. Mahava Alon ராணுவத் தளத்தில் தான் சிறப்பு பயிற்சிகளை ஹீப்ரு பேசாத யூத படைப்பிரிவினருக்கு இஸ்ரேல் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கம்பெனி படைகளும் பிரத்யேக பயிற்சி வகுப்புகளை இங்கு நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தை பாதுகாக்க பெருமளவில் தரைப்படைகளை அங்கு இஸ்ரேல் குவித்துள்ளது. இந்த தளத்தில் வடக்கு பிராந்திய ராணுவத்துக்கு தேவையான போர் உபகரணங்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.இந்த Mahava Alon ராணுவ தளத்தை அடைய வழி நெடுகிலும் பல ஐயன் டோம் சிஸ்டம்கள், ராணுவ பாசறைகள் உட்பட இஸ்ரேலின் பல கட்ட கண்காணிப்புகளை கடந்து செல்ல வேண்டும்.

அப்படி இருந்தும், தங்களது ஆள் இல்லா விமானம், வெற்றிகரமாக அனைத்து தடைகளையும் கடந்து, இலக்கை துல்லியமாக தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.தற்போது, ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா தாக்குதலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறிக் கொள்ளும் நிலையில், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவி தங்களது ஆயுதம் தாக்கியுள்ளதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

ஹிஸ்புல்லாவின் இந்த ஆள் இல்லா விமானத்தை தாக்க 10 விமான எதிப்பு, தடுப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவிய நிலையிலும், அவை அனைத்தில் இருந்திலும் தப்பி, ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானம் இலக்கை தாக்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள ஆக்கிரமிப்பு ராணுவம், இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பல இடங்கள் தீக்கிரையாகி உள்ளதாக isreal broadcasting corporation செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற ஒரு தாக்குதலை அந்த குறிப்பிட்ட பகுதியில் யாரும் இதுவரை பார்த்ததில்லை என அதன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சனிக்கிழமை ஒரே நாளில் பல ராணுவ நிலைகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில ஆயுதங்கள் 25 கிலோ மீட்டர் தூரம் வரை, இடைமறித்தலை முறியடித்து இலக்குகளை தாக்கியுள்ளன.
இந்த தாக்குதல்கள் அனைத்தும் காசா மக்களுக்காக நடத்தப்பட்ட ஒன்று என்றும், தங்களது தலைமை தளபதி ஃபவுத் சுக்கூர் படுகொலைக்கான மிகப்பெரிய பிரத்யேக தாக்குதல் விரைவில் நடைபெறும் என ஹிஸ்புல்லா மீண்டும் எச்சரித்துள்ளது.

================

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button