உலகம்

நேருக்கு நேர்

ஹிஸ்புல்லா அமைப்புக்கு கால அவகாசம் வழங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் இஸ்ரேல், கடந்த சில நாட்களாக, விமான குண்டு வீச்சுக்களை தீவிரப்படுத்தி வருகிறது. திங்கட்கிழமை ஒரே நாளில் 97 லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.இதனையொட்டி, தெற்கு லெபனானுக்குள், இஸ்ரேலின் 98வது படைப்பிரிவு நுழைந்துள்ளது. அவர்களை நோக்கி கடும் பதிலடியை ஹிஸ்புல்லா கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதனிடையே கடந்த 2 நாட்களாக ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது நடத்திய கடும் தாக்குதல்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.செப்டம்பர் 30ஆம்தேதி 12 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.

ஹைஃபா நகரம் அதனைச் சுற்றியுள்ள யூத ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மீது Fadi 1 ராக்கெட்டுகளை ஏவியுள்ளதாக அறிவித்துள்ளது. இது காசா மக்களுக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என அறிவித்துள்ளது.கலீலி பிராந்தியம் மீது வீசப்பட்ட 10 ராக்கெட்டுகள் மூலம் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக ஆக்கிரமிப்பு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Kfar Giladi என்ற யூத குடியிருப்பு மீது ஹிஸ்புல்ல வீசிய Noor ராக்கெட் மூலம் குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ராக்கெட்டை ஹிஸ்புல்லா, முதன் முறையாக பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட் 100 கிலோ மீட்டருக்கு மேல் சென்று, இலக்குகளை தாக்கும் கனரக ராக்கெட் என கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் குழுமியிருந்த, Yiftah பகுதி மீது ராக்கெட்டு தொகுப்புகளை வீசியதில், தங்களது ஆயுதம் இலக்கை நேரடியாகத் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.Bethsaida, Zaaoura ஆகிய பகுதிகள் மீது அடுத்தடுத்து 2 ராக்கெட் தொகுப்புகளை வீசியதில், தங்களது ஆயுதம் இலக்கை துல்லியமாக, நேரடியாகத் தாக்கியதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.Naqoura வில் உள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவத் தளம் மீது Fadi 2 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button