அம்பலமான கோழைத் தனம்!

பேஜர் தாக்குதல், ஹசன் நஸ்ருல்லாவின் கொலை உள்ளிட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, லெபனானுக்குள் நுழைந்ததாக இஸ்ரேல் படைகள் பொய் சொன்னது அம்பலமாகியுள்ளது.ஒரே ஒரு இடத்தில் ஊடுருவ முயன்று, ஹிஸ்புல்லாவிடம் கடும் பதிலடி கிடைத்ததால், இஸ்ரேல் படைகள் பின்வாங்கி ஓடிவந்த செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, பெய்ரூட்டைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அலி ரிஸ்க் (Ali Rizk) அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இஸ்ரேல் படைகள், பெலனானுக்குள் நுழைய முயன்றது உண்மை தான். ஆனால் ஹிஸ்புல்லாவின் கடும் பதிலடியைத் தொடர்ந்து, பின்வாங்கி ஓடினர்.
லெபனான் எல்லைக்குள் வெற்றிகரமாக நுழைந்துவிட்டதாக ஒரு பிரச்சாரத்தை இஸ்ரேல் மேற்கொண்டது. இது இஸ்ரேலின் உளவியல் போரின் ஒரு பகுதியாகும். உண்மையில் திங்கட்கிழமை நள்ளிரவு லெபனான் எல்லைக்குள் நுழைய முயன்றபோது, ஹிஸ்புல்லாவின் கடும் பதிலடியை எதிர்கொண்டு, பின்வாங்கிச் சென்று விட்டனர்.
லெபனான் எல்லைக்குள் நுழைவது இஸ்ரேலுக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஹிஸ்புல்லா அதன் தலைவரை இழந்துவிட்டதால், எளிதாக லெபனான் எல்லைக்குள் நுழைந்து விடலாம் என இஸ்ரேல் தப்பு கணக்கு போட்டுள்ளது. தரை வழியாக நுழைந்தால், இஸ்ரேல் கடும் இழப்புகளைச் சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.