விரிவுபடுத்தப்பட்ட நடவடிக்கை!

டெல் அவிவ் மீது ஹிஸ்புல்லா மற்றும் ஏமன் ஹவுத்திப்படைகள் அடுத்தடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் 2 பேர் மட்டுமே காயம் அடைந்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேல் கூடுதல் விபரங்களை வெளியிடவில்லை.
அதேநேரம் வடக்கு இஸ்ரேல் மீது முன் எப்போதும் இல்லாத தொடர் தாக்குதல்களை ஹிஸ்புல்லா தொடங்கியுள்ளது. இதனால் ஆக்கிரமிப்பு செட்டில்மென்ட் பகுதிகளில் அபாய ஒலி ஏற்பட்டு, லட்சக்கணக்கானவர்கள் பாதாள அறைகளில் பதுங்கினர்.மெதுல்லா பகுதியில், இடைவிடாத அபாய எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டு வருவதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. Misgav Am என்ற நகரத்திலும் அபாய எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சம்பவமாக, மீண்டும் மொசாத் தலைமையகம் மற்றும் 8200 யூனிட் எனப்படும் ராணுவ உளவுப்பிரிவு தலைமையகத்தை குறிவைத்து, “Fadi-4” மிசல்ஸ்களை ஹிஸ்புல்லா வீசியுள்ளது.இந்த தாக்குதலுக்கு முன்னர் டெல் அவிவ், மற்றும் ஈழட் நகரங்களை குறிவைத்து, பாலிஸ்டிக்ஸ் மிசல்ஸ்கள் மற்றும் ஆள் இல்லா விமானங்களை ஏவி ஹவுத்திப்படைகள் தாக்குதல் நடத்தின.
இதில் சில ஆயுதங்களை தடுத்து விட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. எனினும் சில ஆயுதங்கள் இலக்கை தாக்கியுள்ளன. இதனால் டெல் அவிவில் பல இடங்களில் வெடிச் சத்தம் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இஸ்ரேல் வெளியிடவில்லை.