உலகம்

24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்கள்!

24 மணி நேரத்தில் 2 இனப்படுகொலைகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் காசாவில் நிகழ்த்தியுள்ளன. 340வது நாளாக காசா மீது தனது கொடூர தாக்குதலை ஆக்கிரமிப்பு படைகள் அரங்கேற்றி வருகின்றன.செவ்வாய்கிழமை மாலை வடக்கு காசாவின் ஜபாலியா அல் பலாட் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உடனடியாக 8 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதில் 3 குழந்தைகள், 2 பெண்கள் அடங்கும். பலர் படுகாயம் அடைந்தனர்.
காசா சிட்டியில் பிரபல உணவு விடுதி அமைந்துள்ள அல் ஷவா சதுக்கத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

யர்முக் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் 2 பேர் பெண்கள், ஒரு குழந்தை அடங்கும். 12 பேர் இந்தத் தாக்குதலில் காயம் அடைந்தனர்.மத்திய காசாவின் அல் புரேஸ்ஜ் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
அல் நுசைரத் அகதிகள் முகாம் மீது மிகப்பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது.ரபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

கான்யூனிசின் அல் மாவாசியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 மீட்டருக்கு நிலம் குழியாக மாறியது.
24 மணி நேரத்தில் மட்டும் தோராயமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆகவும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆகவும் உள்ளது. சிகிச்சை பலனின்றி, மேலும் பலர் உயிரிழக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவிடம் இருந்து இஸ்ரேல் பெற்ற, 2000 பவுண்ட் எடை கொண்டு, ராட்சத, நாசகர வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button