ஹவுதி தாக்குதல் எதிரொலி – முடங்கிய இஸ்ரேலின் 2வது துறைமுகம்!

காசா மீதான இஸ்ரேலின் போர்க்குற்ற நடவடிக்கைகளை நிறுத்தும் வரை, செங்கடல் வழியாக எந்த சரக்கு கப்பலும் இஸ்ரேல் துறைமுகங்களுக்கு செல்ல முடியாது என போர் அறிவிப்பை ஏமன் ஹவுத்திப்படைகள் அறிவித்தன.
இதனையடுத்து கடந்த 10 மாதங்களாக செங்கடல் உள்ளிட்ட ஏமனை ஒட்டிய கடற்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் ஹவுத்திக்கள் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் செங்கடலில் அமைந்துள்ள இஸ்ரேலின் ஈழட் துறைமுகம் 85 சதவீத பணிகள் பாதிக்கப்பட்டு, திவால் நிலையை அடைந்து விட்டது. இந்த நிலையில், இஸ்ரேலின் மற்றொரு முக்கிய துறைமுகமான அஸ்டோட் துறைமுகம் கடும் நட்டத்தை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.
ஆரம்பமாக சுமார் 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹவுத்தி நடவடிக்கையால் செங்கடல் வழியாக அந்த துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.துருக்கியில் இருந்து, அந்த துறைமுகத்திற்கு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், அவற்றை அந்நாடு முழுவதுமாக நிறுத்தியுள்ளது.இதே போல் இஸ்ரேல் பங்குச் சந்தைகள் 3 சதவீதம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.