“சாதாரண காய்கறி சாப்பிடுவது கூட காசா குழந்தைகளின் நிறைவேறாத கனவு”

காய்கறிகள் கூட கிடைக்காதா என ஏங்கும் காசா குழந்தைகள்…
இப்படி ஒரு போரை வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை…
உலக உணவுக் கழகத் தலைவர் வேதனை…
World Food Programme அமைப்பின் தலைவர் Matthew Hollingworth காசாவில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டுள்ளார். இதுகுறித்த அவரது கருத்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“இன்று நாம் பார்ப்பது, அழிவு மற்றும் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதி மட்டுமே, இது வேறு எந்தப் போரிலும் உலகில் வேறு எங்கும் நான் பார்த்ததை விட மிகப் பெரியது” என பதிவிட்டுள்ளார்.
இன்னும் செய்ய நிறைய இருக்கிறது. இன்று காசாவில் நான் சந்தித்த ஒவ்வொரு குழந்தையும் அதையே சொன்னது. அவர்கள் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், அவர்கள் இறைச்சி சாப்பிட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இது அரிதான ஒரு வாழ்க்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஐக்கிய நாடுகள் மன்ற ஊடகங்களில் பேசிய அவர், “நமக்குத் தேவையானது உடனடியான போர்நிறுத்தம். மக்கள் சோர்வடைந்துள்ளனர், ஒவ்வொரு நாளும் அவர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவர்களுக்கு முழுமையாக உதவ முதலில் போர் நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள், ஐ.நா. மன்றம் உள்ளிட்ட எந்த சர்வதேச அமைப்புகளின் கோரிக்கைகளையும் நிராகரித்து, தொடர்ந்து இனப்படுகொலைகளை அரங்கேற்று வருகிறது இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.