இந்தியா

கட்டணம் உயர்த்தப்பட்டதால், ஜியோவிற்கு ஒரு வருடத்திற்கு மட்டும் ரூ. 17,000 கோடி கூடுதல் லாபம்!

மொபைல் ரீசார்ஜ் கட்டண உயர்வால் 109 கோடி மக்கள் பாதிப்பு…
ஜியோவிற்கு வருடத்திற்கு கூடுதலாக 17 ஆயிரம் கோடி ரூபாய் லாபம்…
மோடியின் அனுமதியுடன் தான் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு…
ஆதாயத்துடன் மோடி செயல்பட்டுள்ளதாக விமர்சனம்…

மொபைல் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நாட்டின் முக்கிய 3 நிறுவனங்கள் திடீரென கட்டணங்களை உயர்த்தி இருப்பதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்தக் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளதன் மூலம் மோடி அரசு க்ரோனி கேப்ரலிடம் அதாவது, பெரு முதலாளிகளுக்கு கள்ளத்தனமாக உதவி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். இந்தக் கட்டண உயர்வால் 109 மொபைல் பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவினம் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ தனது ஒரு பயனாளர் மீது கூடுதலாக மாதத்திற்கு 30 ரூபாய் கட்டணத்தை அதிகரித்திருப்பதன் மூலம் ஆண்டுக்கு ஜியோ, கூடுதலாக 17 ஆயிரத்து 568 கோடி ரூபாய் லாபம் பெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏர்டெல் நிறுவனம் வருடத்திற்கு சுமார் 10 ஆயிரத்து 704 கோடி ரூபாய் கூடுதலாக லாபம் சம்பாதிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வோடஃபோன் நிறுவனம் 6 ஆயிரத்து 552 கோடி ரூபாய் கூடுதலாக சம்பாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோடி அரசுக்கு அவர் கேள்விகளை பட்டியலிட்டுள்ளார். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) முதலாவதாக, வருடத்திற்கு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்ட உள்ள இந்த நிறுவனங்கள், மத்திய அரசின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களை பெறாமல் எவ்வாறு தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்த அனுமதிக்கப் பட்டன என கேள்வி எழுப்பியுள்ளார்.

2) இரண்டாவதாக, 109 கோடி மக்கள் மீதான கடமையையும், பொறுப்பையும், மோடியும், டிராய் அமைப்பும் ஏன் கை விட்டன என வினவியுள்ளார்.

3) 3வதாக, தேர்தல் முடிவும் வரை இதற்காக ஏன் மோடி அரசு காத்திருந்தது. தேர்தலுக்கு முன்பு ஏன் இப்படி ஒரு அறிவிப்பை அவர்கள் வெளியிடவில்லை?

4) 4வதாக ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாகவும், இது தொடர்பான லாப நஷ்ட கணக்குகள் தொடர்பாகவும், மோடி அரசோ, அல்லது டிராய் அமைப்போ முறையாக ஆய்வு செய்துள்ளார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button