அரசியல்

“என்னை அவமானப்படுத்தி விடாதீர்கள் நானே ராஜினாமா செய்கிறேன் ” – குலக் கல்வித் திட்டத்தை கொண்டு வந்ததற்கு பரிசாக முதலமைச்சர் பதவியை இழந்த ராஜாஜி!

அதிகாரத்தில் இருக்கக் கூடிய ஒரு அரசியல் கட்சி, அடுத்தடுத்து வளர்வதற்குகோ, இல்லை ஒரே அடியாக ஒழிஞ்சு போறதுக்கோ, முக்கிய காரணம் அந்த கட்சி அறிமுகம் செய்கிற திட்டங்கள் தான்.அப்படி ஒரு மோசமான திட்டத்தால மூதறிஞர்னு சொல்லப்படுற ராஜாஜியுடைய சொந்த அரசியல் வாழ்க்கையும், காங்கிரஸ் கட்சியுடைய அரசியல் எதிர்காலமும் முடிவுக்கு வந்ததுனு சொல்லாம்.அப்படி அவர் கொண்டு வந்த திட்டம் தான் குலக்கல்வித் திட்டம். இந்த திட்டம் தான் 70 வருசமா திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்யதுக்கும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கே வர முடியாம போனதற்கும் முக்கிய காரணம்.நம்ம தமிழ்நாடு இன்னைக்கு கல்வில முதன்மை மாநிலமா இருக்கு. ஆனா 70 வருசத்துக்கு முன்னால ரொம்ப மோசமான நிலைல இருந்தது.அப்போது, தமிழ்நாட்டுடைய கல்வியறிவு வீதம் வெறும் 21 சதவீதம் தான்.மொத்த குழந்தைகளில் வெறும் 49 சதவீதம் பேர் மட்டும் தான் ஸ்கூலுக்கே போவாங்க…
மீதம் உள்ள 51 சதவீத குழந்தைகள், கோலி குண்டு விளையாடிட்டு, குளம் குட்டைல குளிச்சிட்டு, கூலி வேலைக்கு போய்ட்டும் இருந்தாங்க..

மழை பேஞ்சா கூட பள்ளிக் கூடத்து பக்கம் ஒதுங்க மாட்டாங்களாம்.இதனால ஒன்றாம் வகுப்பில் 12 லட்சம் மாணவர்கள் சேர்ந்தால், 5 ஆம் வகுப்பு வரும் போது, அந்த எண்ணிக்கை வெறும் 4 லட்சமாக குறைஞ்சது.
அதாவது சுமார் 8 லட்சம் மாணவர்கள் 5ஆம் வகுப்பு கூட முடிக்காம பாதியிலயே படிப்ப நிறுத்திட்டாங்க.
இந்த மோசமான நிலைமைய சரி செய்யனும்னு, அப்போதைய எதிர்கட்சியான திமுகவின் தலைவர் அண்ணா உள்ளிட்டவர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கைகள் வச்சிட்டு வந்தாங்க…இதையெல்லாம் சரிசெய்யனும்னா, அரசாங்கத்துக்கு கல்விக்கு மட்டும் வருசத்துக்கு 1 கோடி ரூபாய் தேவைப்பட்டது.ஆனா அப்போ முதலமைச்சரா இருந்த நம்ம ராஜாஜி ஒதுக்கியது வெறும் 5 லட்சம் ரூபாய் தான்.இதுக்கு அப்போ இருந்த திமுக எதிர்ப்பு தெரிவிச்சாங்க…
காமராஜர் போன்ற காங்கிரஸ் தலைவர்களும், இதனை எதிர்த்து, நிதிய அதிகமா ஒதுக்கச் சொன்னாங்க…

ஆனா ராஜாஜி இத நான் வேறு மாதிரி டீல் பண்றேனு சொல்லி மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் னு ஒரு திட்டத்தை அறிவிச்சாரு.ஆகா பேரே சூப்பரா இருக்கே… இந்த திட்டத்தோடு, விபரத்தை சொல்லுங்கனு கேட்கும் போது, ஒரு விபரம் சொன்னாரு…கேட்டா ரொம்ப காமெடியா இருக்கும்.அதாவது, அந்த காலத்துல 1st standard ல இருந்து 5th standard வரைக்கும் சுமார் 6 மணி நேரம் தான் ஸ்கூல் இருக்கும்.இத 3 மணி நேரமா குறைச்சிடலாம். இதனால ஒரு வகுப்பை மட்டுமே கவனிச்சிட்டு வர ஒரு டீச்சர், இதுக்கு பிறகு 2 வகுப்பை ஈசியா கவனிக்க முடியும். இதனால் டீச்சர்ஸ் உடைய எண்ணிக்கைய உயர்த்த தேவையில்லைனு சொன்னாரு.சரி, மாணவர்கள் 3 மணி நேர ஸ்கூல்கு வந்தா போதுமானு கேட்டப்போ, ஆமா. மீதம் உள்ள 3 மணி நேரம் தங்களுடைய பெற்றோருக்கு உதவியா, அதாவது அவங்க என்ன தொழில் பண்றாங்களோ, அதே தொழில இவங்களும் பழகிட்டாங்கனா, எதிர்காலத்துல, அவங்களுக்கு பிரச்னை வராதுனு சொன்னாரு.உதாரணமா, ஒரு டாக்டர் உடைய பிள்ளை, பாதி நேரம் அவங்க அப்பா கூட இருந்தா, அவனுக்கும் டாக்டர் தொழில் பத்தி interest வரும் னுசொன்னாரு.

ஆண் பிள்ளைங்க அவங்க அப்பா தொழிலையும், பெண் பிள்ளைங்க அவங்க அம்மா கூட வீட்டு வேலையும் கத்துக்கலாம் னு அந்த கல்வித் திட்டத்துல இருந்தது தான் இதுல ஹைலட்இத கேட்ட பெரியார், அண்ணா போன்றவர்கள் ஒரு கேள்வி கேட்டாங்க…அதாவது டாக்டர், எஞ்சினியர் பிள்ளைகளுக்கு நீங்க சொல்வது சரி, வெட்டியான் பிள்ளை, வெட்டியான் வேலையும், துப்புரவு தொழிலாளி பிள்ளை, துப்புரவு தொழிலும் கத்துக்கனுமானு கேட்டாங்க…இதற்கு ராஜாஜிட்ட பதில் இல்ல.ஏற்கனவே பாதி குழந்தைக ஸ்கூலுக்கு போகாம ஊர சுத்திட்டு, இருந்தாங்க… மீதி குழந்தைங்க தான் வேண்டா வெறுப்பா ஸ்கூலுக்கு போய்ட்டு இருந்தாங்க.. இப்போ மொத்தமே 3 மணி நேரம் தான் ஸ்கூல்னு சொன்னா, ஏற்கனவே போய்ட்டு இருக்கிற பிள்ளைகளும், இடையிலேயே நிக்கறதுக்கு வாய்ப்பு அதிகமாயிடுச்சு.அடுத்ததா நம்ம கையில தான் தொழில் இருக்கே.. பிறகு படிச்சு என்ன பண்றதுன்னு ஒரு சிந்தனை குழந்தைகளுக்கு வர ஆரம்பிச்சது.
இந்த திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளபிடிச்சு. திக, திமுக போன்ற அமைப்புகள் கடும் போராட்டத நடித்தினாங்க..

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே காமராஜர் தலைமையில ஒரு அணி, இந்த திட்டத்த கடுமையாக எதிர்த்தாங்க..
ஒரு கட்டத்துல, ராஜாஜிய முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கனும்னு தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டாங்க…
இந்த விசயத்தோடு, சீரியஸ்னஸ தெரிஞ்சுகிட்ட ராஜாஜி, எப்படியும் இவங்க நம்மல பதவியில இருந்து தூக்கிடுவாங்க…
அதுக்கு முன்னால நாமலே விலகுரது நல்லதுனு முடிவுக்கு வந்து, ஒரு அறிக்கை கொடுத்தார்.என்னை தீர்மானம் போட்டு, பதவியில் இருந்து விலக்கி, அவமானப்படுத்தி விடாதீர்கள். நானே விலகுகிறேன்னு அறிக்கை வெளியிட்டு, அதே மாதிரி பதவியும் விலகினார்.அந்த விசயத்துல அவர பாராட்டலாம்.அதுக்கு பிறகு, முதலமைச்சரான காமராஜர், முதல் வேலையா குலக்கல்வித் திட்டத்தை ரத்து செஞ்சார்.மொத்த பட்ஜெட்ல இருந்து 30 சதவீத நிதிய கல்விக்கு ஒதுக்கினாரு.
பள்ளிகளுடைய எண்ணிக்கைய 15 ஆயிரத்தில இருந்து 29 ஆயிரமாக உயர்த்தினாரு.கல்வித்துறைக்கு தனி அமைச்சர நியமனம் செஞ்சாரு.இந்தியாவே அண்ணார்ந்து பார்க்கிற அளவுக்கு அவர் கொண்டு வந்த திட்டம் தான் மதிய உணவுத் திட்டம்.இந்த திட்டத்தால தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. இதுனால தான் காமராஜருடைய ஆட்சிய கல்வி வரலாற்றுல ஒரு பொற்காலம்னு சொல்றாங்க…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button