உலகம்

டொனால்டு டிரம்ப் பரபரப்பு பேச்சு!

கமலா ஹாரிஷ் அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், 2 ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதிபர் வேட்பாளர்கள் இடையேயான நேரடி விவாதம் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி கடும் தாக்குதல் தொடுத்தனர். இதில் டொனால்டு டிரம்ப் பேசியதாவது, நெதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய போது, அந்தக் கூட்டத்தில் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ளவில்லை. நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், காசா போரே நடைபெற்று இருக்காது.நான் அதிபராக இருந்த போது, ஈரான் துவண்டு போய் இருந்தது.

ஹமாசுக்கு கொடுக்க அப்போது, ஈரானிடம் பணம் இருக்கவில்லை. ஹிஸ்புல்லாவுக்கு வழங்கவும் அவர்களிடம் பணம் இருக்கவில்லை. இன்னும் 28 அமைப்புகளுக்கு ஈரான் தற்போது நிதி அளித்து வருகிறது. இவ்வாறு பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேலுக்கு தன்னை தானே தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது. அந்த நிலைப்பாட்டை நான் தொடர்ந்து ஆதரிப்பேன். அதே நேரம் ஏராளமான குழந்தைகள், பெண்கள் என பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். எனவே நான் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறேன். நிச்சயம் போர் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button