புர்ஜ் கலீபாவில் டீக்கடை – அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் டோலி சாய் வாலா…

புர்ஜ் கலீபாவில் டீக்கடை
– அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் டோலி சாய் வாலா…
டோலி சாய்வாலாவிற்கு பெரிய அறிமுகம் தேவையில்லை.
தற்போது துபாய் சென்றுள்ள டோலி சாய்வாலா அங்குள்ள உலகின் மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலீபாவுக்கு சென்றுள்ளார். புர்ஜ் கலீபாவின் உயரம் 2716 மீட்டர் ஆகும்.
அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், புர்ஜ் கலீபாவின் உச்சிக்கு சென்று அங்கு டீ அருந்தும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
அதில் சிலர் புர்ஜ் கலீபாவின் உச்சியில் ஒரு டீ கடை அமைக்கவேண்டும் என்றும் டோலி சாய்வாலாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புர்ஜ் கலீபாவில் ஆயிரம் சதுர அடி இடத்தின் ஒரு மாத வாடகை மட்டும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
ரசிகர்களின் வரவேற்பு மற்றும் கோரிக்கையை ஏற்று, அவர் அங்கு டீக்கடை அமைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சாதாரண டீ விற்பவர் தற்போது உலகின் உச்சத்தை அடைந்ததையும் பலரும் குறிப்பிட்டு பாராட்டி இருந்தனர்.
அது சரி, இந்தியாவில் டீ விற்றவர்கள் மிகப்பெரும் இடங்களுக்கு செல்வது சாதாரணமானது இல்லைதானே…
=============