உங்க ஏசியில் இது இருக்கா?… ஒருமுறை செக் பண்ணிக்கோங்க…!

சம்மர் ஸ்டார்ட் ஆகிடுச்சி, ஏர் கூலர்களையும் ஏசிகளையும் ஆன் செய்ய வேண்டிய நேரம் வந்தாச்சு. ஆனா ஒரு நிமிஷம் இருங்க, உங்க வீட்ல ஏசி அது இருக்கான்னு ஒருமுறை செக் பண்ணிக்கோங்க? அதுக்கு முன்னாடி இந்த வீடியோவ ஒருமொற பார்த்துடுங்க.. ஏசி பத்தின இந்த வீடியோ சோசியல் மீடியாவுல இப்போ ட்ரெண்ட்ல போய்ட்டு இருக்கு…
உங்க வீட்டிலும் ஏசி இருக்கா? ரொம்ப நாளா அதை ஆன் பண்ணாமல் வச்சியிருந்தீங்கன்னா, அது இப்போ பாம்புகளோட வாழ்விடமா கூட மாறியிருக்கலாம். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துல இருக்குற பெண்துர்த்தி அப்படிங்கிற ஏரியாவுல நடந்திருக்கு. கோடை வெயிலோட கொடுமை தாங்கமா, சத்யநாராயணாங்கிறவர் தான் வீட்டோட ஏசியை ஆன் பண்ணியிருக்காரு. அப்போ தான் அந்த ஷாக்கிங் சம்பவம் நடந்திருக்கு. ஏசி வெண்டில் இருந்து பாம்பு ஒன்று தலையைத் நீட்டி பார்த்திருக்கு. பல நாளால ஆன் பண்ணாத அவரோட ஏசியில பாம்பு ஒண்ணு குட்டிகளோட குடும்பம் நடத்திட்டு இருந்திருக்கு.
இதை பார்த்து இதயமே நின்னுபோற அளவுக்கு ஷாக் ஆன சத்யநாராயணா உடனே பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்திருக்காரு. அவங்க சம்பவ இடத்துக்கு வந்து ஒரு பாம்பையும், அதோட 8 குட்டிகளையும் பத்திரமா மீட்டிருக்காங்க. ஒவ்வொரு பாம்பா எடுத்து பாம்பு பிடிக்கிறவங்க தங்களோட பையில போடுற வீடியோவை பார்த்து இன்டர்நெட்டே ஷாக்காகி இருக்கு. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோவை பார்க்கும் பலரும்… “நம்ப வீட்டு ஏசியில முதல்ல பாம்பு இருக்கான்னு செக் பண்ணனுப்பா..” என கமெண்ட் செய்து வருகின்றனர்.